tamilnadu

img

காடா துணியில் கையெழுத்து இயக்கம் தொடக்கம்

காடா துணியில் கையெழுத்து இயக்கம் தொடக்கம்

விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம் தொடர்கிறது

கோவை, ஏப்.18 – கோவை, திருப்பூர் மாவட்டங் களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நியா யமான கூலி உயர்வு கோரி 29  நாட்களாக தொடர் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கருமத்தம் பட்டியில் நான்காவது நாளாக கால வரையற்ற உண்ணாவிரதப் போராட் டம் மேற்கொண்டு வரும் விசைத் தறியாளர்கள், அரசின் கவனத்தை  ஈர்க்கும் விதமாக காடா துணியில் கையெழுத்து இயக்கத்தை வெள் ளியன்று தொடங்கினர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பவன் குமார் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல் வியடைந்ததை அடுத்து, கடந்த செவ்வாயன்று இரவு முதல் 11  விசைத்தறியாளர்கள் காலவரை யற்ற உண்ணாவிரதத்தை ஆரம் பித்தனர். இவர்களுக்கு ஆதர வாக உண்ணாவிரதப் பந்தலில்  அமர்ந்துள்ள விசைத்தறியாளர் கள், போராட்டத்தை மேலும் வலுப் படுத்தும் நோக்கில் காடா துணி யில் கையெழுத்து இயக்கத்தை துவக்கினர். இதில் விசைத்தறியா ளர்கள் மட்டுமல்லாது, ஏராளமான பொதுமக்களும் கையெழுத்திட்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர் சங்கத் தலைவர் பூபதி பேசுகையில், “ஜவுளி உற் பத்தியாளர்கள் ஒப்பந்தக் கூலி யைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து 29 நாட்களாக நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட் டத்தால், சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி இழப்பு ஏற் பட்டுள்ளது. மாநில அரசும், கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வா கங்களும் உடனடியாக தலை யிட்டு, நியாயமான கூலி உயர்வை உறுதி செய்ய வேண்டும். கோரிக் கைகள் நிறைவேறும் வரை கால வரையற்ற உண்ணாவிரதம் உள் ளிட்ட தொடர் போராட்டங்கள் தீவிர மடையும்,” என்று எச்சரிக்கை விடுத்தார். முன்னதாக, வியாழனன்று சட்ட மன்றத்தில் விசைத்தறியாளர்க ளின் கூலி உயர்வு பிரச்சனை முன் னுக்கு வந்து, விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்பி ரச்சனையில் விரைவில் தீர்வை எட்டுவோம் என கைத்தறி துறை  அமைச்சர் காந்தி, கோவை பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர், சட்டமன்றத் தில் உறுதி அளித்துள்ளது குறிப் பிடத்தக்கது.