tamilnadu

img

பட்டா வழங்க கோரி முற்றுகை

பட்டா வழங்க கோரி முற்றுகை

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட சிறுபூழுவப்பட்டி ரங்க நாதபுரம் பகுதி மக்கள், பட்டா கேட்டு, செவ்வாயன்று திருப்பூர்  வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகை யில், “நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து  வருகிறோம். பட்டா வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2021-ஆம் ஆண்டு நில அளவுகள் செய்து  வருமானச் சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்ட அனைத்து  ஆவணங்களையும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தும் இதுவரை  பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்” என்று குற்றம் சாட்டினர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், அவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறு தியளித்தனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.