பிளிப் கார்ட் ஒப்பந்த நிறுவனத்தில் ஏழு பேர் வேலை நீக்கம் சிஐடியு தலையீட்டில் வேலைக்கு எடுத்துக் கொள்ள உறுதியளிப்பு
திருப்பூர், ஏப். 30 - பிளிப் கார்ட் ஆன் லைன் நிறுவனத் தின் ஒப்பந்த கொரியர் நிறுவனத்தில் வேலை செய்த ஏழு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சிஐ டியு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி யதில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஏழு பேரையும் மீண்டும் வேலைக்கு எடுத் துக் கொள்ள அந்த ஒப்பந்த நிறுவன நிர் வாகம் உறுதியளித்துள்ளது. திருப்பூர் ஷெரீப் காலனி பின்புறம் குறிஞ்சி நகரில், பிளிப் கார்ட் ஆன் லைன் நிறுவனத்தின் சரக்குகளை கையாளும் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனையாளர்களிடம் இருந்து சரக்கு களைப் பெற்று பிளிப் கார்ட் கோவை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டு, ஆன் லைனில் வாங்கும் நுகர் வோருக்கு அங்கிருந்து பொருட்கள் அனுப்பப்டும். விற்பனையாளர்களிடம் சரக்குகளை பெற்று அனுப்பும் இந்த கொரியர் சேவையில் பிளிப் கார்ட்டின் ஒப்பந்த நிறுவனமான வி எக்ஸ்பிரஸ் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மையத்தில் 60க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் பல ஆண்டு காலமாக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வி எக்ஸ்பிரஸ் ஒப் பந்த நிறுவனத்தினர் இங்கு வேலை செய்யும் ஊழியர்களிடம் மிரட்டுவது, ஊதியத்தில் முறைகேடு செய்வது, ஏதேனும் காரணம் சொல்லி வெளியே நிறுத்துவது, கேள்வி கேட்பவர்களை வேலையை விட்டு வெளியேற்றுவது என கொத்தடிமைத் தனமாக நடத்தி உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் ஊழியர் ஒருவரை வேலையை விட்டு நிறுத்தியதுடன் அவ ருக்கு பல மாதங்களாக ஊதியம் தர வில்லை. இத்துடன் ஏழு இளைஞர் களையும் வேலையை விட்டு நிறுத்தி யுள்ளனர். இது குறித்து இங்கு வேலை செய்யும் ஊழியர்கள் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கச் செயலாளர் என்.சுப் பிரமணியத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். ஏழு பேர் வேலை நீக்கம், அடுக்கடுக்கான மிரட்டல், ஆத் திரமூட்டல், பழிவாங்கல் நடவடிக்கை களைத் தொடர்ந்து ஏப்ரல் 30 புதன் கிழமை அன்று இங்கு வேலை செய் யும் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலை வர் ஜி.சம்பத், பிளிப் கார்ட் மையத்திற் குச் சென்று வேலை நிறுத்தம் செய்த ஊழியர்களிடம் விபரத்தைக் கேட்டறிந் தார். அவர்கள் வி எக்ஸ்பிரஸ் நிறுவனத் தின் பழிவாங்கும் மிரட்டல் நடவடிக்கை களையும், இது குறித்து தொழிலாளர் துறை, காவல் துறையிடம் புகார் தெரி வித்தும் எந்த மாற்றமும் இல்லை என் றும் தெரிவித்தனர். தொழிலாளர்களின் புகார்களைக் கேட்ட பிறகு சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.சம்பத்தும், சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கச் செயலாளர் என்.சுப்பிரமணியமும் வி எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டனர். திருப்பூர் நிர்வா கத் தரப்பினர் சென்னையில் உள்ள இந் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு மேலா ளருடன் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினர். சிஐடியு நிர்வாகிக ளிடம் அந்த மேலாளர் தொலைபேசி யில் பேசினர். ஏழு ஊழியர்களை சட்டவிரோத மாக பணி நீக்கம் செய்தது உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண் டும் என சிஐடியு தரப்பில் வலியுறுத்தி னர். மற்ற பல விபரங்கள் குறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த லாம். எனினும் ஏழு பேர் பணி நீக்கம் குறித்து உரிய முடிவு செய்ய வேண் டும் என்று சிஐடியு தரப்பில் வலியு றுத்தப்பட்டது. இதையடுத்து பணி நீக்கம் செய்யப் பட்ட ஏழு பேரையும் மீண்டும் வரும் மே 5ஆம் தேதி திங்கள்கிழமை முதல் வேலைக்கு எடுத்துக் கொள்வது என்று நிர்வாகம் ஒப்புக் கொண்டு உறுதிய ளித்தது. இந்த விபரத்தை சிஐடியு மாவட் டத் தலைவர் ஜி.சம்பத் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் தெரிவித் தார். ஊழியர்கள் முன்வைத்திருக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக அடுத்தக் கட்டமாக நிர்வாகத்திடம் பேசித் தீர்வு காணலாம் என்று கூறப் பட்டது. இதையடுத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டு பிற்பகல் தங்கள் பணியைத் தொடர்ந்தனர். சிஐடியு தலையிட்டு பிளிப் கார்ட் ஆன்லைன் நிறுவனத்தின் ஒப்பந்த நிறு வனத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஏழு பேருக்கு மீண்டும் வேலை வழங்க உறுதியளிக்கப்பட்டது அந்த ஊழியர்களிடம் உற்சாகத்தையும் நம் பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.