tamilnadu

img

பட்டு வளர்ச்சித் துறையினருக்கும் ஓய்வூதியம் வேண்டும்

பட்டு வளர்ச்சித் துறையினருக்கும் ஓய்வூதியம் வேண்டும்

கோவை, ஏப். 8 – சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்குவது போன்று, பட்டு வளர்ச்சித் துறையில்  பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக் கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச் சித் துறை ஓய்வூதியர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை ஓய்வூதியர் சங்கத்தின் கோவை  மண்டல பொதுக்குழுக் கூட்டம், கோவை தாமஸ் கிளப்பில் செவ் வாயன்று நடைபெற்றது. மண்டலத் தலைவர் வி.சௌந்தரராஜன் கூட்டத் திற்குத் தலைமை தாங்கினார். மண்டல  செயலாளர் எஸ்.சக்திவேல் ஆண்ட றிக்கையையும், பொருளாளர் ஏ.மணி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப் பித்தனர். அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்க மாநில துணைத் தலைவர் என்.அரங்கநாதன் மற்றும் மாவட்டத் தலைவர் மதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  இதில், பணியில் சேர்ந்த நாள் முதல்  தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை  வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற  தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். சத்துணவு மற் றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்குவது போல், பட்டு வளர்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண் டும். ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர் களுக்கும் அவர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) தொகையை உடனடி யாக திரும்ப வழங்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. இக்கூட்டத்தில் பட்டு வளர்ச்சித்  துறை ஓய்வூதியர் சங்க மாநிலப் பொரு ளாளர் எஸ்.தேவராஜன் சிறப்புரை யாற்றினார். மாநிலத் தலைவர் ஆர். துரை நிறைவுரையாற்றினார். மண்டல  துணைத் தலைவர் எம்.பன்னீர்செல் வம் நன்றியுரை கூறினார்.