வாலிபர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு
வாலிபர் சங்க பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். பகுதியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பள்ளி பாளையம் தெற்கு ஒன்றிய சிறப்புப் பேரவை கூட்டம் ஞாயி றன்று நடைபெற்றது. எம்.லட்சுமணன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் எம்.மணிகண்டன் சிறப்புரை யாற்றினார். இந்திய மாணவர் சங்க மாநில துணைத்தலை வர் டி.சரவணன் வாழ்த்துரையாற்றினார். இதைத்தொடர்ந்து வாலிபர் சங்க பள்ளிபாளையம் ஒன்றியத் தலைவராக எஸ். வெங்கட், செயலாளராக எம்.நவீன், பொருளாளராக எஸ். பூபாலன், துணைத்தலைவராக வி.மணிகண்டன், துணைச் செயலாளராக எம்.ஹேமலதா மற்றும் 15 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்
தருமபுரி, மார்ச் 2- கடத்தூர் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்ட லில் ஈடுபட்டவர் மீது காவல் துறையினர் போக்சோ வழக்குப் பதிவு செய்துள்ளனர். தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (45). இவர் அப்பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடு பட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி 1098 சைல்டு லைனுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள் ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் பாலியல் சீண்ட லில் ஈடுபட்ட சுதாகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சுதாகர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி என கூறப்படுகிறது.