சுகாதாரமற்ற குடிநீரால் தொற்று நோய் அபாயம்
குடிமங்கலம் ஒன்றிய பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் தரைமட்டம் மற்றும் மேல் நிலை குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்யாததால், சுகாதாரமற்ற குடிநீர் விநியோகப்படுவதாகவும், இதனால் தொற்று நோய் பரவும் அபா யம் உள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சி கவலை தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விஜயகுமார் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அளித்த மனு வில், திருமூர்த்திமலை கூட்டுகுடிநீர் திட் டம் மூலம் குடிமங்கலம் ஒன்றியம் பொட்டயம்பாளையம் நீர்தேக்கத் தொட்டியில் இருந்து இராமச்சந்திராபு ரம் கிராமத்தில் உள்ள தரைமட்டத் தொட்டிக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு, உள் ளூர் மக்களுக்கும் பிற கிராமங்களுக் கும் விநியோகம் செய்யப்படுகிறது. பல வருடங்களாக இந்த தரை மட்டத் தொட்டி சுத்தம் செய்யப்படா ததால், தொட்டியில் இருந்து விநியோ கம் செய்யப்படும் குடிநீர் சேறும் சகதியு மாக மாசுபட்டு வருகிறது. இதனால், அசுத்தமான குடிநீரை அருந்துவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சுகாதாரமான குடி நீர் கிடைக்க ஆட்சியர் உரிய தலையீடு செய்ய வேண்டும் என மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.
கோபியில் சிபிஎம் கொடிகள் சேதம்: காவல் நிலையத்தில் புகார்
கோபியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு தொடர் பாக கட்டப்பட்டிருந்த கொடிகள் மற்றும் தோரணங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. மதுரையில் நடைபெற்று வரும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, கோபி பேருந்து நிலை யம் எதிரே உள்ள பாலத்தில் கட்சி சார்பில் விளம்பர பேனர்கள், தோரணங்கள் மற்றும் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், புதனன்று இரவு அடையா ளம் தெரியாத நபர்கள் சிலர் கட்சி கொடி கள் மற்றும் தோரணங்களை கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர் பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுக்கா செயலாளர் பெருமாள் வியாழ னன்று கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கொடிகள் மற்றும் தோரணங்களை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்கே ஸ்டீல் இரும்பாலையின் இசைவாணையை ரத்து
செய்திடுக ஈரோடு, ஏப். 3 - பெருந்துறை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆர்கேஸ்டீல் இரும்பாலையின் இசைவாணையை ரத்து செய்ய வலியுறுத்தி பெருந்துறையில் மக்கள் நல சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் - ஆர்.கே.ஸ்டீல் இரும்பாலை அபாயகரமான ரசாயனக் கழிவுகளை சட்டவி ரோதமாக வெளியேற்றி வருகிறது. நீர் நிலைகளையும், நிலத்தையும் மாசுபடுத்தி பேராபத்தை ஏற்படுத்தி வருகி றது. எனவே இந்நிறுவனத்தின் இசைவாணையை ரத்து செய்யவும், அரசால் அறிவிக்கப்பட்ட சிப்காட் பொது சுத் திகரிப்பு நிலையப் பணிகளை விரைந்து செயல்படுத்தவும் வலியுறுத்தி பேருந்து நிலைய வளாகத்தில் ஒருங்கிணைப் பாளர் சின்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தீ விபத்து
கோவை, ஏப். 3- கருமத்தம்பட்டி அருகே ரேசன் கடையில் இரவு திடீ ரென தீ விபத்து ஏற்பட்ட சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தி யது. கோவை, கருமத்தம் பட்டி அருகே எலச்சிபாளை யம் கிராமத்தில் நியாய விலைக் கடை இயங்கி வரு கிறது. இந்த ரேஷன் கடை ஊழியர் வழக்கம் போல புத னன்று பணி முடிந்து மாலை யில் வீடு திரும்பிய அவர், இரவு 7 மணியளவில் கடை யில் இருந்து புகை வெளி யேறுவதை அக்கம்பக்கத் தினர் கண்டனர். உடனடியாக கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, தீப்பற்றி எரிவது தெரி யவந்தது. அங்கிருந்தவர் கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இதில், கடையில் இருந்த கைரேகை மெஷின் தீயில் கருகி முற்றிலும் அழிந்துவிட் டது. இருப்பினும், தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டதால், அத்தியா வசியப் பொருட்கள் பாது காக்கப்பட்டன. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “திடீரென ரேஷன் கடையில் இருந்து புகை வந்ததைப் பார்த்து உள்ளே சென்றபோது, தீ எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தீயை அணைத் ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின் கோளாறுதான் இதற்குக் கார ணமாக இருக்கலாம்” என்ற னர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் மேலும் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.