எத்தலப்பர் மணி மண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
சுதந்திரப் போராட்ட வீரர் எத் தலப்பரின் மணி மண்டபத்தை, மக் கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்ற கோரிக்கை எழுந் துள்ளது. சுதந்தரப் போராட்ட வீர்ரும், தளி பாளையக்காரருமான எத்தலப ருக்கு, கடந்தாண்டு திருப்பூர் மாவட் டம், திருமூர்த்திமலையில் மணி மண்டபமும், உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் அவருக்கு சிலையும் தமிழக அரசால் வைக் கப்பட்டது. இந்நிலையில், திரு மூர்த்திமலையில் இருக்கும் மணி மண்டபம் பொதுமக்கள் பயன்ப டுத்த முடியாத நிலையில் உள் ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றி யச் செயலாளர் ஜெகதீசன் கூறுகை யில், ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்த தளி பாளையக்காரர் எத் தலப்பருக்கு பெருமை சேர்க்கும் விதமாக மணி மண்டபம் கட்ட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) கோரிக்கை வைத்தது. தமிழக அரசாங்கம் திரு மூர்த்திமலையில் எத்தலப்பருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான ஏற் பாடுகள் செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்து கடந்த வருடம் திறக் கப்பட்டது. ஆனால், தற்போது வரை பொதுமக்களின் பயன்பாட் டுக்கு கொண்டு வராப்படாமல், கடந்த ஓராண்டு காலமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இச்செயல் திருமூர்த்திமலையில் இருக்கும் தனியார் திருமண மண்டபங்க ளுக்கு சாதகமாக மாவட்ட நிர்வா கம் செயல்படுவதாக சந்தேகத்தை ஏற்படுகிறது. எனவே, மணி மண் டபத்தை உடனடியாக பொதுமக் கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிய ளிக்க வேண்டும். இல்லையேனில், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும், என்றார்.