tamilnadu

டவ்-தே புயல் காரணமாக பவானி மற்றும் சிறுவாணி பகுதிகளில் மழை.....

மேட்டுப்பாளையம்:
டவ்-தே புயல் காரணமாக பவானி மற்றும்சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை கடந்த 2 நாட்களாக பெய்து வருகிறது.இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இத னால், 83 அடியாக பில்லூர் அணையின் நீர்மட்டம் தற்போது 86 அடியாக உயர்ந்துள்ளது.இந்நிலையில், அணையில் 2 ஜென ரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை
நீடிக்கும் என்பதால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் கோவை, திருப்பூர் பகுதிகளுக்கு செயல்ப டுத்தக்கூடிய குடிநீர் திட்டங்களுக்கு தேவையான தண்ணீர் தடையின்றி கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.

;