tamilnadu

img

ரயில்வே தேர்வை தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டும்

ரயில்வே தேர்வை தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டும்

ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநர் காலி  இடங்களுக்கான கணினி அடிப் படையிலான தேர்வை (சிபிடி) தமிழ்நாட்டிலேயே நடத்த வேண் டும் என ஒன்றிய அரசிற்கு இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ரயில்வே தேர்வு வாரியம் மார்ச்  19ஆம் தேதி லோகோ பைலட் தேர்வு 2ஐ நடத்த உள்ளது. இத் தேர்வை எழுதுவதற்கு தமிழ்நாட்டி லிருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  இளைஞர்கள் தேர்ச்சி பெற்றுள்ள னர். ஆனால், அவர்களுக்கான தேர்வு மையங்கள் தமிழ்நாட்டிற்கு  வெளியே அண்டை மாநிலங்களில்  1500 கிலோ மீட்டருக்கும் அதிக மான தூரத்தில் அமைக்கப்பட்டுள் ளது. இதனால் தமிழ்நாட்டு இளை ஞர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து தேர்வு எழுத முடியாத சூழல்  ஏற்பட்டுள்ளது. மேலும், இது இளை ஞர்களுக்கு நிதிச் சுமையையும், கடுமையான அலைச்சலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும்.  எனவே, ஒன்றிய ரயில்வே அமைச் சகம் உடனடியாக இதில் தலை யிட்டு, தமிழ்நாட்டு இளைஞர்கள் தமிழ்நாட்டிற்குள்ளேயே தேர்வு எழுதக்கூடிய வகையில் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும்  என வலியுறுத்தி இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் சார்பில் தமிழ் நாடு முழுவதும் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், பெருந்துறை தபால் நிலையத்தில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. சங்கத் தின் மாவட்டச் செயலாளர் வி.ஏ. விஸ்வநாதன் தலைமையில் நடை பெற்ற இப்போராட்டத்தில் மாவட் டக்குழு உறுப்பினர் கு.சதிஸ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.