வேலை நேரத்தை 8 மணி நேரமாகக் குறைக்க
ரயில் ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தல்
ரயில் ஓட்டுநர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாகக் குறைக்க வேண்டு மென அகில இந்திய ரயில் ஓட்டு நர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர் கழகத்தின் (ரயில் ஓட்டு நர்கள் சங்கம்) ஈராண்டு பொது மகாசபை ஈரோடு மாவட்டம் சத்யம் மகாலில் மார்ச் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இரண் டாம் நாள் மாநாடு ரயில் நிலையத் திலிருந்து பேரணியுடன் தொடங்கி மாநாட்டு வளாகத்தை அடைந்தது. துணை பொதுச் செயலாளர் கே.ரவிச் சந்திரன் அனைவரையும் வரவேற் றார். மத்திய துணைத் தலைவர் எம். எம்.ரோலி, செயல் தலைவர் எல்.மோனி, பொதுச் செயலாளர் கே.சி.ஜேம்ஸ், இணைச் செயலாளர் கே. பார்த்தசாரதி, ஒருங்கிணைச் செய லர் வி.பாலச்சந்திரன், நிரந்தர அமைப்பாளர் பி.என்.சோமன், தென் மேற்கு ரயில்வே மண்டல செயலா ளர் ஆர்.சுரேந்திரன் ஆகியோர் சிறப் புரை ஆற்றினர். மாநாட்டில், ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தின் தென் மண்டல தலைவ ராக ஆர்.குமரேசன், செயலாளராக கே.பி.வர்கீஸ், பொருளாளர் ஜெகே சன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேர மாகக் குறைக்க வேண்டும். விபத்து களைத் தவிர்க்க தொடர் இரவுப் பணியை 2 ஆகக் குறைக்க வேண் டும். வெளியூர் ரயில் இயக்கும் ஓட்டு நர்களை 48 மணி நேரத்தில் வீட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைத்து தொழிலாளர்களுக்கும் உடனடியாக அமல்படுத்த வேண் டும். விருப்ப பணியிட மாறுதல் கோரிக்கைகளை விரைந்து நிறை வேற்ற வேண்டும். பெண் ரயில் ஓட்டு நர்களின் உரிமையையும், பாதுகாப் பையும் உறுதி செய்ய வேண்டும். வேலை நேர ஓய்வோடு வார ஓய்வை யும் சேர்த்து வழங்க வேண்டும். பய ணப்படியில் 70 விழுக்காடு வரி விலக்கு அளிக்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.