tamilnadu

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கெதிராய் மக்கள் சந்திப்பு இயக்கம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கெதிராய் மக்கள் சந்திப்பு இயக்கம்

தருமபுரி, ஏப்.20- ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட  வேண்டும், என வலியுறுத்தி மின் ஊழி யர்கள் ஞாயிறன்று மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஈடுபட்டனர். மின்துறையை தனியார்மயமாக் கும் முயற்சியை கைவிட வேண்டும். தனியார் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடிபெற்றது.  ஒன்றிய அரசு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என்கிற ஒரு திட் டத்தை கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட்  மீட்டர் பொருத்தக்கூடிய நிறுவனமே மின்சாரக் கட்டணத்தை வசூல் செய்து,  அதற்குண்டான பணத்தை எடுத்துக் கொண்டு, மின் கொள்முதல் செய்யப் பட்ட நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு, மீதமுள்ள தொகையை மின்சார விநி யோக நிறுவனத்தின் கணக்கில் செலுத் தும். பொருத்தக்கூடிய மீட்டருக்கான தொகையாக ஏழு வருட காலத்திற்கு மாதம் ரூ.80 முதல் ரூ.150 வரையிலும்  கட்டணமாக வசூலித்துக் கொள்ள லாம். அதேபோல மின்சார கட்ட ணத்தை மின்சாரத்தின் பயன்பாடு அதிக மாக உள்ள நேரத்தில் (பீக்அவர்) அதிக  கட்டணங்களை விதிப்பதற்கு உண் டான ஏற்பாடுகள் அந்த மீட்டரில் செய் யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் சாரக் கட்டணம் கடுமையாக உயரும்.  ஏற்கனவே ஜிஎஸ்டி போன்ற ஒன்றிய அர சின் நடவடிக்கைகளால் அழிந்து போயி ருக்கக்கூடிய சிறு, குறு தொழில்கள் அனைத்தும் மேலும் நசிந்து போகும்.  எனவே, இத்திட்டத்தை கைவிட  வேண்டும். தமிழ்நாடு மின்வாரியத்தில்  காலியாக உள்ள 60 ஆயிரம் பணியி டங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு  தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு, ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மற்றும் தமிழ்நாடு பவர் இன் ஜின் ஆர்கனைசேசன் சார்பில், ஞாயி றன்று மக்கள் சந்திப்பு இயக்கம் நடை பெற்றது. தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற இயக்கத்திற்கு, சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செய லாளர் தீ.லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் பி.ஜீவா, மாவட்டப் பொருளாளர் திம்மராயன், கோட்டத் தலைவர்கள் எஸ்.பி.சிவக்குமார், எம். ஆறுமுகம், எஸ்.ஆறுமுகம், கோட்டச்  செயலாளர்கள் செயலாளர் கே.ஜெக நாதன், ஏ.கோவிந்தன், இணைச்செய லாளர் டி.மகாத்மா, மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் விஜயன், லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், சித்தோடு நால் ரோடு மற்றும் வீரப்பன் சத்திரம் ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் துணைத்தலைவர் எம்.ஆர்.பெரியசாமி தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் சி.ஜோதிமணி, கிளைச் செயலாளர் பி.ஸ்ரீதேவி, நிர்வா கிகள் கே.ஆர்.சண்முகம், எம்.லோக சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். உடுமலை இதேபோன்று, உடுமலை பேருந்து  நிலையம், பழனி சாலை, பொள்ளாச்சி  சாலைகளில் சனியன்று மக்கள் சந்திப்பு  பிரச்சாரம் இயக்கம் நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் உடுமலை  தலைவர் ஜெகனந்தா தலைமை வகித் தார். இதில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன் மற்றும் மின்  ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்