tamilnadu

img

காய்ந்துபோன தென்னை மரத்திற்கு இழப்பீடு வழங்கிடுக

காய்ந்துபோன தென்னை மரத்திற்கு இழப்பீடு வழங்கிடுக

தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஏப்.28- காய்ந்துபோன தென்னை மரத் திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், என வலியுறுத்தி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தி னர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளை ஈயால் பாதிக்கப் பட்டு, காய்ந்துபோன தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். வெள்ளை ஈயை கட்டுப்படுத்த மாநி லம் முழுவதும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தென்னை மரங்களுக் கும் பயிர் காப்பீடு செய்ய உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். சொட்டுநீர் பாசனங்களுக்கு அரசு முழு மானியம் வழங்க வேண்டும். தென்னை விவசாயிகளை பாது காக்க ஆண்டுக்கு இருமுறை இல வசமாக உரங்கள் வழங்க வேண் டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் திங்க ளன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் பொ.பொன்னு சாமி, தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் சோ.அருச்சு னன், மாவட்டத் தலைவர் எம்.குமார், மாவட்டப் பொருளாளர் சி. வஞ்சி, துணைத்தலைவர்கள் எஸ். தீர்த்தகிரி, ஆர்.சின்னசாமி, துணைச் செயலாளர்கள் கே.அன்பு, ஆர். சக்திவேல், தென்னை விவசாயி கள் சங்க நிர்வாகிகள் சி.சிங்கா ரம், பி.மாது, பி.முருகன், அ.ராம லிங்கம், ஆர்.ஞானசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி இதேபோன்று பொள்ளாச்சி யில், திருவள்ளுவர் திடல் பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு தென்னை விவ சாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் தலைமை ஏற்றார். இதில், சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எ.காளப்பன், மாவட்டச் செயலாளர் ஸ்டாலின்  பழனிசாமி, மாவட்ட பொருளாளர் ஜெ.ரவீந்தரன், தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, த.வி.சங்கம் தாலூகா தலைவர் ஏ.ஈஸ்வரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். முடிவில், டி.பாண்டி ரமேஷ் நன்றி  கூறினார். போராட்டத்தில் திரளான தென்னை விவசாயிகள் பங்கேற்ற னர்.