tamilnadu

img

மனைப்பட்டா கிடைக்கும் வரை போராட்டம்: சிபிஎம்

மனைப்பட்டா கிடைக்கும் வரை போராட்டம்: சிபிஎம்

தருமபுரி, மே 16- புறம்போக்கு நிலங்களில் வசிப் போருக்கு பட்டா கிடைக்கும் வரை  போராட்டம் தொடரும், என மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப் பினர் கே.பி.பெருமாள் தெரிவித் துள்ளார். தருமபுரி வட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கணிச மாக வாழ்ந்து வருகின்றனர். நில மற்ற குடும்பத்தினர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கூலி வேலை செய்து வருகின்றனர். இப் பகுதிலுள்ள அரசு புறம்போக்கு  நிலத்தில் பல தலைமுறைகளாக வீடு கட்டி குடியிருந்து வருகின்ற னர். விவசாயம் செய்து வருகின்ற னர். எனவே, புறம்போக்கு நிலங்க ளில் நீண்ட காலம் குடியிருந்து வருபவர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். ஆட்சேப னையற்ற புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்து வரும் அனைவருக் கும் நிலப்பட்டா வழங்க வேண்டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி யினர் வெள்ளியன்று தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடு பட்டனர். இப்போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.கோவிந் தசாமி, நகரச் செயலாளர் ஆர். ஜோதிபாசு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், மாநிலக்குழு உறுப்பினர் கே.பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் இரா.சிசு பாலன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் டி.எஸ்.ராமச்சந்திரன், என்.கந்தசாமி, கே.பூபதி, ஏ.ஜெயா, எம். அருள்குமார் உட்பட பலர் கலந்து  கொண்டனர். முடிவில், வட்டாட்சி யர் சன்முகசுந்தரத்திடம் 500 மனுக் கள் வழங்கப்பட்டது. இதனிடையே, கே.பி.பெரு மாள் பேசுகையில், கடந்த 2006 ஆம்  ஆண்டு மனைப்பட்டா கேட்டு விவ சாயிகள் சங்கம் போராட்டம் நடத் தியது. இதன் விளைவாக இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க அரசு முன்வந்தது. இப்படி ஒவ்வொரு முறையும் போராட்டம் நடத்தி  மனைப்பட்டா பெற்று வருகி றோம். பல்வேறு கிராமங்களில் வழங்கப்பட்ட மனைப்பட்டா மக்க ளிடம் உள்ளது. ஆனால், அதற் கான இடத்தை வழங்கவில்லை. சிலருக்கு பட்டாவிற்கான இடம் உள்ளது. வீடு கட்டுவதற்க்கு பணம் இல்லை. சில அலுவலர்கள் லஞ்சம்  பெற்றுக்கொண்டு வசதி படைத்த வர்களுக்கு பட்டா வழங்குகின்ற னர். கோவில் நிலங்களை வசதி படைத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருகின்றனர். அதே கோவில் நிலத்தில் வீடு  கட்டி குடியிருந்து வரும் ஏழை  எளிய, மக்களை அறநிலையத் துறை வெளியேற்ற முயற்சிக்கி றது. எனவே, மக்கள் குடியிருக் கும் இடத்தை ஆராய்ந்து உடன டியாக பட்டா வழங்க வேண்டும். புதியதாக விண்ணப்பித்தவர்க ளுக்கு இலவச பட்டா வழங்க வேண் டும். இல்லையெனில் மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டம் தொடரும், என்றார்.