ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டி
தொழில்முறை கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்
நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கேட்டு சேலத்தில், நலிந்த தொழில் முறை கலை ஞர்கள் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட அரசு தமிழ் வளர்ச்சி மன்றம் ஏற்ப டுத்தி தரவேண்டும். தமிழ் மொழி இலக்கி யவாதிகள், படைப்பாளர்கள், கலைஞர்கள் அனைவரின் தகவல்களை சேகரித்து மாவட்ட அரசு தமிழ் வளர்ச்சி மன்றத்தில் உறுப்பினராக்கி அடையாள அட்டை வழங்க வேண்டும். நலிந்த தமிழ் மொழி வழி இலக்கி யவாதிகள் படைப்பாளர்கள் கலைஞர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண் டும். 2019 முதல் 25 ஆம் ஆண்டு வரை நலிந்த கலைஞர்கள் ஓய்வூதியம் வேண்டி விண்ணப்பித்து கடந்த ஆறு ஆண்டு களாக காத்துள்ள அனைவருக்கும் மாத ஓய்வூதியம் விரைந்து வழங்க வேண்டும் தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூ தியத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பாரத வெண்புறா இயக்கத்தின் நிறுவனர் கலை மாமணி ஏ.கே.பி. கதிர்வேலு தலைமை ஏற்றார்.