ஆபாசப் படம்: தொலைக்காட்சி உரிமையாளர் மீது வழக்கு
அரசு கேபிள் டி.வி.யில் ஆபாசப் படம் ஒளிபரப்பப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு தரப்பில், ‘டிஏசி டிவி’ என்ற பெயரில் உயர்தர கேபிள் சிக்னல்களை பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. பொழுதுபோக்கு, விளையாட்டு, ஆன்மீகம், செய்திகள் மற்றும் குழந்தைகள் பார்க்கக்கூடிய வகையில் கார்ட்டூன், பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வியை மேம்படுத்து வதற்காக கல்வி டிவி உள்ளிட்டவைகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அலுவலகம் மூலம் 31,380 கேபிள் டிவி இணைப்புகள் உள்ளன. 229 சாட்டிலைட் சேனல்கள் வழங்கப்படுகிறது. இந்த அரசு கேபிள் டிவி மூலம் 15 தனியார் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களும் சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், 11 சேனல்களில் ஒன்றான தருண் டிவி சேனலில் கடந்த மார்ச் 6 ஆம் தேதியன்று மதியம் ஒரு மணியளவில் ஆபாச வீடியோ ஒளி பரப்பப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச் சியடைந்தனர். இதையடுத்து கேபிள் டிவி வட்டாட்சியர் ராஜராஜன், கொடுத்த புகாரின் பேரில் தருமபுரி நகர காவல் துறையினர் தருண் டிவியின் உரி மையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சர்பேஷ் ஆகியோர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.