குடிநீர் கேட்டு ஆட்சியரிடம் மனு
தருமபுரி, ஏப்.21- ரெட்டியூர், சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த இஸ் லாமிய மக்கள், குடிநீர் வசதி கேட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எர்ரன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட ரெட்டியூர் சமத்துவபுரம் பகுதியில், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறைகளாக முறை யான குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஆறு மாதங்களுக்கு முன் இதுசம்மந்தமாக ஆட்சியர் அலு வலத்தில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த நீர்தேக்கத்தொட்டிக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்படாமல், காட்சிப்பொருளாக உள்ளது. ஊருக்கு மிக அருகில் நீர்தேக்கத்தொட்டி இருந்தும், தண்ணீருக்காக அலைய வேண்டியுள் ளது. வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டபோது, அதற்கான நிதி கிடைத்தவுடன் புதிய போர் போடப்பட்டு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும், என 5 மாதங்க ளுக்கு முன்பே கூறினார். பல மாதங்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேகிராமத்தின் மற்ற பகுதிகளுக்கு ஒகேனக்கல் குடிநீர் செல்கிறது. ஆனால், இஸ்லாமிய மக்கள் குடியிருப்பு பகுதிக்கு மட் டும் தண்ணீர் இணைப்பு வழங்கப்படாதது என்பது, சிறுபான்மை சமூகத்தை திட்டமிட்டே புறக்கணித்து வருவதாகத் தெரிகிறது. தற்போது கோடைக்காலம் என்பதால் குடிநீர் மற்றும் அன்றாட தேவைக்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, கட்டி முடிக்கப்பட்டு பயனற்று கிடக்கிற நீர்தேக்கத்தொட்டிக்கு ஒகேனக்கல் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். அல்லது புதிய போர் அமைத்து ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்தித்தர வேண்டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி.காரல் மார்க்ஸ் தலைமையில் அப்பகுதி மக்கள் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் சதீஷிடம் மனு அளித்தனர்.
சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியில் திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கிழக்கு மாநக ரக்குழு உறுப்பினர் ஆர்.வைரமணி தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் கே.பச்சமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேயர் அறையை புதுப்பிக்க மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு
நாமக்கல், ஏப்.21- நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.15 லட்சத் தில் மேயர் அறை புதுப்பிக்கப்படுவதற்கு, மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 39 வார்டுகளை உள்ளடக்கிய மாநகராட்சியுடன் 12 கிராம ஊராட்சிகள் இணைக்கப் பட்டுள்ளன. மாநகராட்சிக்கு உரிய மண்டல அதிகாரி கள், கூடுதல் பணியாளர்கள் நியமனம் விரைவில் நடை பெற உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதி கள் மற்றும் திட்டப் பணிகளில் மந்தநிலை காணப்படு கிறது. வரி வசூலும் முழுமையாக வசூலிக்கப்படாத சூழல் உள்ளது. இந்நிலையில், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மேயர் அறை நவீன வடிவமைப்பில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாமன்ற உறுப்பினர்கள் கூறுகையில், மாநகராட்சியில் பல திட்டப்பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. மக்கள் நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்ள ரூ.15 லட்சத்தை ஒதுக்கலாம். அதை விடுத்து, நன்றாக இருந்த மேயர் அறையை நவீனப்படுத்தி வருகின்றனர். எங்களுடைய வார்டுகளில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சனைகள் தொடர் பாக, மாமன்றத்தில் கேள்வி எழுப்பினால் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை. தற்போது இந்த செலவினம் தேவை தானா? இந்த பிரச்சனையை வரும் மாமன்ற கூட்டத்தில் கட்டாயம் எழுப்புவோம், என்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாநகராட்சிகளில் மேயர் அறை புதுப்பிப்புக்காக ரூ.20 லட்சம் வரை தனி யாக நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்கு மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற தேவையில்லை. மாநகராட்சி மேயரே முடிவு செய்து அறை பணிகள் ஒதுக்கீட்டுக்கு நிதியை ஒதுக்கலாம், என்றனர்.
தனியார் கல்வி நிறுவனம் மீது புகார்
ஈரோடு, ஏப்.21- சுகாதாரத்திற்கு தீங்கு விளைக்கும் செயலில் ஈடு பட்டு வரும் தனியார் கல்வி நிறுவனம் மீது ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாரளித்துள் ளனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சென்னி மலைபாளையம் உள்ளது. அப்பகுதியில் நந்தா பொறி யியல் கல்லூரி, மருத்துவமனை மற்றும் கல்லூரி, பாலி டெக்னிக் கல்லூரி, சித்தா மற்றும் ஆயுர்வேத கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல் மருத்துவமனை மற்றும் கல்லூரி, சென்ட்ரல் பள்ளிகள் செயல்பட்டு வரு கின்றன. இவைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் விளையாட்டு மைதானத்தின் அருகில் குவித்து வைத்து, அவ்வப்போது தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதில் ஆபத்தான மருத்துவக்கழிவுகளும், நெகிழிகளும் அடங் கும். குப்பைகளை கொளுத்தும் போது கடுமையான கரும்புகை எழுந்து குடியிருப்பினை சூழ்ந்து கொள்கி றது. இதனால் மக்கள் மூச்சுத்திணறலால் அவதிக் குள்ளாகி வருகின்றனர். பலமுறை சொல்லியும் அந்நிர் வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி, கழிவுநீரினை டேங்கர் லாரி மூலம் ஓடையில் விடுவதால், விவசாய நிலங்கள் மற்றும் குடிநீ்ர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தனியார் கல்வி நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் திங்களன்று ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.