tamilnadu

img

கோவையில் சமத்துவ தீபாவளி கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் உள்ள தேரம்பாளையத்தில் ஜாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து சமத்துவ தீபாவளி கொண்டாடினர். 
பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பாக சமத்துவ தீபாவளி கொண்டாடம் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், சீக்கியர் என அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டனர்.. ஜாதி,மத,இன வேறுபாடுகளின்றி அனைவரும் இணைந்து பட்டாசு வெடித்து ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதில் பெரும் பங்கு வகிக்கும் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக சுமார் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.
பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவரும், சிறுபான்மை ஆணைய உறுப்பினரும் ஆன முகம்மது ரபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளரும் காரமடை அரங்கநாதர் கோவில் அறங்காவலர் உறுப்பினரும் ஆன எம்.எம்.இராமசாமி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகளை வழங்கினார்.