tamilnadu

img

தீபாவளி பலகாரத்தை காகிதத்தில் வரைந்து மோடிக்கு பார்சல் மாதர் சங்கம் நூதன போராட்டம்

விலைவாசி உயர்வால் தீபாவளி பலகாரத்தை ருசிக்க முடியாத நிலை இருப்பதால் இந்திய பெண்களின் நிலையை பிரதமருக்கு உணர்த்த காகிதத்தில் பலகாரம் வரைந்துமோடிக்கு பார்சல் அனுப்பும் நூதன போராட்டத்தில் மாதர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.

 அத்தியாவசி பொருட்களின் விலை அன்றாடம் உயர்ந்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வேலையின்மை, வருவாய் இல்லாமை போன்றவற்றால் அவசியமான செலவுகளைக்கூட செய்ய முடியாத நிலை உள்ளது. குடும்பத்திற்கு மாதம் ரூ7,500 வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை பிரதமர் காது கொடுத்து கேட்க மறுக்கிறார். ஆகவே பெண்களின் துயரத்தை உணரமுடியாத பிரதமருக்கு காகிதத்தில் பலகாரம் வரைந்து பார்சல் அனுப்பும் நூதன போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.

முன்னதாக காட்டூர் மாதர் சங்க மாவட்டக்குழு அலுவலகம் முன்பு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேசன் கடைகளில் இலவசமாக வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராஜலட்சுமி, சுதா மற்றும் விஜயலட்சுமி, பங்கஜவல்லி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். வழக்கமாக தீபாவளிக்கு வகைவகையாக வாங்கி உண்ணும் பலகாரங்களை இந்தாண்டு பேப்பரில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் பலகாரங்களை காகிதத்தில் வரைந்து பிரதமருக்கு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்கத்தின் நூதன போராட்டம் அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.