உதகை மலை ரயில் சேவை ரத்து
மே.பாளையம், மே 9– மண் சரிவால் மலை ரயில் பாதையில் பாறாங்கற் கள் உருண்டு விழுந்து இருப்பு பாதை சேதமடைந் துள்ளதால், மேட்டுப்பாளை யம் - உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட் டுள்ளதாக ரயில்வே நிர்வா கம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம், மேட் டுப்பாளையத்தில் இருந்து தினசரி உதகைக்கு நீலகிரி மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது.நூற்றாண்டு பழமை வாய்ந்த உலக பாரம்பரிய சின்ன மான இம்மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரு கின்றனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மலை யின் பல்வேறு இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்தது. வியாழ னன்று பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக ஹில்குரோவ் - குன்னூர் ரயில் நிலையங்களுக்கிடையே மண் சரிவு ஏற்பட்டது. மேலும், மலை ரயில் பாதை யில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்து தண்ட வாளம் சேதமடைந்தது. இதனால் வெள்ளியன்று காலை மேட் டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கம் போல் உதகை நோக்கி புறப்பட்ட மலை ரயில் கல்லாறு ரயில் நிலையம் வரை சென்று விட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கே திரும்பி வந்தது. இத னால் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து மலை ரயிலில் சென்ற சுற்றுலாப் பயணிகள் ஏமாற்ற மடைந்தனர். மலை ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்த 184 பயணிகளுக்கும் ரயில்வே நிர்வாகத்தால் டிக்கெட் கட்டணம் திரும்பி வழங்கப்பட்டது. ரயில்வே இருப்புப்பாதை சரி செய்தவுடன் வழக்கம்போல உதகை மலைரயில் சேவை தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.