மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
தருமபுரி, மே 10- மின்வாரிய தொழிற்சங்கங்க ளின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பொது வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், வேலை நிறுத்த ஆயத்த மாநாடு தருமபுரி சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் சனியன்று நடை பெற்றது. சிஐடியு மின்ஊழியர் மத் திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் ப.ஜீவா தலைமை வகித் தார். இக்கூட்டத்தில், மின்சார திருத்த சட்ட மசோதா 2022யை திரும்பப்பெற வேண்டும். புதிய ஓய்வூதியத் திட் டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதி யத் திட்டத்தை அமல்படுத்த வேண் டும். 44 தொழிலாளர் நல சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை திரும் பப்பெற வேண்டும். போனஸ் உச்ச வரம்பை கைவிட்டு, கூடுதலாக போனஸ் தொகை வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டதாரி களை கொண்டு நிரப்ப வேண்டும். பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை அடை யாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மே 20 ஆம் தேதி யன்று தருமபுரியில் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறிய லில் பெருமளவு தொழிலாளர்களை பங்கேற்க செய்து, போராட்டத்தை வெற்றிபெற செய்வது, என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், எச்எம்எஸ் மாநில துணை பொதுச்செயலாளர் அ.ஆறு முகம், ஏஐசிசிடியு மாநிலத் தலை வர் சி.முருகன், ஏஇஎஸ்யூ திட்டச் செயலாளர் கே.விநாயகமூர்த்தி, எல்பிஎப் திட்டத் தலைவர் ஆ.ரவிச் சந்திரன், சிஐடியு மின் ஊழியர் மத் திய அமைப்பின் மாவட்டச் செயலா ளர் தீ.லெனின் மகேந்திரன், யூடியூசி மாநிலச் செயலாளர் எஸ்.கோகுல் தாஸ், ஏஐசிசிடியு திட்டச் செயலா ளர் வி.சிவராமன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டப் பொருளாளர் ஆர்.திம்மராயன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில், யூடியூசி திட்டத் தலைவர் ஏ.அருள்நாதன் நன்றி கூறி னார்.
மின்தடை
ஈரோடு, மே 10- ஈரோடு மாவட்டம், பெருந் துறை, திங்களுர் துணை மின்நிலையத்தில் உள்ள சிறுவலூர் மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 13 ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) நடை பெற உள்ளது. இதனால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த திங்களுர், கல்லா குளம், வெட்டையன்கிணறு, மந்திரிபாளையம், சுப்பையன் பாளையம், தாண்டா கவுண் டண்பாளையம், சுங்ககாரன் பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப் பட்டுள்ளது.