போக்சோ வழக்கில் ஒருவர் கைது
கோவை, ஏப்.15– சூலூர் அருகே 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மது ரையைச் சேர்ந்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சூலூர் அருகே, பஞ் சாலை தொழிலாளியின் 13 வயது மகளை, மதுரையை சேர்ந்த ராபர்ட் கிளைவ் (47) என்பவர் கடத்திச் சென்று பலவந்தமாக திருமணம் செய்து பாலியல் வன்கொ டுமை செய்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து சிறுமி யின் குடும்பத்தினர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப் படையில் போலீசார் விசா ரணை மேற்கொண்டு ராபர்ட் கிளைவை போக்சோ பிரிவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராபர்ட் கிளைவ் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.