tamilnadu

img

காலமானார்

கோவை , மே 3-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட முன்னாள்  செயலாளரும், சிங்காநல்லூர்  சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தோழர் கே.சி.கருணாகரனின் மனைவி ராஜேஷ்வரி அவர்கள் ஞாயிறன்று காலை 6 மணியளவில் உப்பிலியபாளையம் வீட்டில் காலமானார்.   இவரின் மறைவை அறிந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து திருச்சி சாலையில் உள்ள சாந்திகியர்ஸ் மின்மயானத்தில் உடல்தகனம் செய்யப்பட்டது.