tamilnadu

img

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850, குடும்ப ஓய்வூதியம், இலவச பேருந்து பயணம், இலவச மருத்துவக் காப்பீடு, பொங்கல் போனஸாக ஒரு  மாத ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங் கம் (TNNAPA) சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலை வர் ராமசாமி தலைமை ஏற்றார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் நாயகம், மாவட்டச் செயலாளர் ராஜகோபால், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் செந்தில்குமார், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன், ஓய் வூதியர் சங்க மாவட்டத் தலைவர் மதன், செயலாளர் அருணகிரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலத் தலைவர் பழனிசாமி கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார். முடிவில், மாவட் டப் பொருளாளர் சாரதாமணி நன்றி கூறி னார். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு, சத்துணவு அங்கன்வாடி  ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் பி.மல்லிகா தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்டச் செயலா ளர் சி.காவேரி, பொருளாளர் சி.கருணா நிதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தெய் வானை, அனைத்துத்தறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.பழ னிச்சாமி, மாவட்டச் செயலாளர் எம். பெருமாள், ஜாக்டோ - ஜியோ மாவட்ட நிதி காப்பாளர் கே.புகழேந்தி, மீன்வளத் துறை மண்டலச் செயலாளர் ஆர்.முரு கன் உட்பட திரளானோர் கலந்து கொண் டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சத்து ணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க  மாவட்டத் தலைவர் கே.கே.காவேரி தலைமை வகித்தார். இதில் அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.சுப்பிரமணியம், மாவட் டச் செயலாளர் சி.ராஜ்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி. சுரேஷ், சத்துணவு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.அமராவதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநி லச் செயலாளர் வி.சுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார்.