tamilnadu

img

நீலகிரி தேவாலாவில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

நீலகிரி தேவாலாவில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி யின் புதிய கட்டிடம் செவ்வாயன்று நீல கிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா திறந்து வைத்தார். தேவால அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப்பள்ளி நீண்ட கால மாக கட்டடம் கட்டியும், திறக்கப்படா மல் இருந்தது. இதன் காரணமாக மாண வர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர், தொடர் போராட் டங்களை முன்னெடுத்து வந்தனர். பொதுமக்களிடம் கையெழுத்து இயக் கங்கத்தை நடத்தி, முதலமைச்சர், ஆதி  திராவிட நலத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினர். இதனையடுத்து, உடனடியாக பள்ளி கட்டிடத்தை திறக்க நிதி ஒதுக்கப் பட்டது. விரைவான நடவடிக்கையின் காரணமாக, புதிய கட்டிடம் தற்போது திறக்கப்பட்டு மாணவர்களின் பயன் பாட்டிற்கு வந்துள்ளது. இதனை நீலகிரி  நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா திறந்து வைத்தார். இந்த புதிய கட்டடம் மாணவர்க ளுக்கு தேவையான அனைத்து வசதி களையும் கொண்டுள்ளது. இந்த பள்ளி  பழங்குடியின மாணவர்களின் கல்வி  தரத்தை மேம்படுத்த உதவும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில்  ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாண வர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.