தேங்கிய மழைநீரை அகற்றாமல் அலட்சியம் ஆதார் அட்டைகளை ஒப்படைக்க மக்கள் முடிவு!
அண்மையில் பெய்த மழையின் காரணமாக தேங் கியுள்ள மழைநீரை அகற்றா மல் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகவும், இனியும் காலதாமதம் செய் தால் ஆதார், வாக்காளர் அட்டைகளை ஒப்படைக்க உள்ளதாக ஆட்சியரிடம் திருப்பூர் வீரபாண்டி குறவர் காலனி பகுதி மக்கள் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி குறவர் காலனியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கி சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது. குறவர் காலனி குடியிருப்புக்கு அருகில் இருந்த குளம் மூடப்பட்ட நிலையில், மழைக் காலங்களில் குடியிருப்புகளுக்குள் தண் ணீர் புகுந்து விடுகிறது. தற்போது பெய்த மழையால் வீடுகளுக்குள் தேங்கியுள்ள நீரால் பாம்பு, விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதி கரித்துள்ளது. மேலும், வீடுகளில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களும் மழையில் நனைந்து சேதமாகிவிட்டது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடன டியாக தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், எதிர்காலத்தில் மழைநீர் தேங்காத வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உடனடியாக கோரிக் கையை நிறைவேற்றாவிட்டால், அரசு வழங்கியுள்ள வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை திரும்ப ஒப்படைக்கப் போவதாகவும், இதுகுறித்து ஆட்சியரிடம் அளித்த மனுவிலும் குறிப் பிட்டுள்ளதாக தெரிவித்தனர்.