மார்க்சிஸ்ட் வாசகர் வட்டம்
கோவை, ஏப்.25– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழுவின் சார்பில், மார்க்சிஸ்ட் வாசகர் வட்டத்தின் துவக்க வகுப்பு வியாழனன்று நடைபெற்றது. மார்க்சிய சிந்தனையை வாசகர்களிடையே பரவலாக்கு வது, மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படையில் சமூக மாற் றத்தை முன்னெடுப்பது போன்ற நோக்கங்களாக கொண்டு தமிழகம் முழுவதும் மார்க்சிய வாசகர் வட்டம் கூட்டங்களை நடத்தி வருகிறது. இதன்ஒருபகுதியாக, மார்க்சிஸ்ட் வாசகர் வட்டத்தின் சார்பில் கோவையில், தத்துவார்த்த அமர்வாக ‘மார்க்சிய பொருளாதாரம்” ஓர் எளிய அறிமுகம் எனும் தலைப்பில் மார்க்சிய அரசியல் பொருளாதார வகுப்பு கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் கல்விக் குழு உறுப்பினர் ஆர்.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. மார்க்சிய வாசகர் வட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. அஜய்குமார் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் பெ.ஆறுகுட்டி சிறப்புரையாற்றினார். இதில் 100க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.
சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு
நாமக்கல், ஏப்.25- சேந்தமங்கலத்தை அடுத்த பச்சுடையாம்பட்டி பகுதி யில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 700க்கும் மேற் பட்ட காளைகளும், 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கம் சார்பில், பச்சுடையாம்பட்டியில் வெள்ளியன்று நடை பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை, நாடாளுமன்ற உறுப் பினர்கள் வி.எஸ்.மாதேஸ்வரன், கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இப் போட்டியில் நாமக்கல், சேலம், திருச்சி, கரூர், மதுரை, புதுக் கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட காளைகளும், 400க்கும் மேற்பட்ட வீரர்க ளும் கலந்து கொண்டனனர். போட்டியில் பங்கேற்ற காளை களுக்கு மாவட்ட கால்நடைத்துறை சார்பில் மருத்துவ பரி சோதனை செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் அனு மதி டோக்கன் வழங்கப்பட்டது. இதேபோல, சுகாதாரத்துறை சார்பில் மாடுபிடி வீரர்களுக்கும் உடல் பரிசோதனை செய் யப்பட்டது. வீரா்கள் அனைவரும் உறுதிமொழியை ஏற்ற பிறகு, வாடிவாசல் வழியாக கோவில் காளையும், அடுத்து ஜல்லிக்கட்டுக் குழுவினரது காளைகளும் அவிழ்த்து விடப் பட்டன. மாடுபிடி வீரர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் நடை பெறாமல் இருக்க ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியின் அருகே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. பிடிபடாமல் தப் பிய காளைகளுக்கும், அடக்கிய வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி காசு, வெள்ளி செயின், பட்டுப்புடவை, ரொக்கப் பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதே போன்று, பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், கல்குறிச்சியைச் சேர்ந்த விவசாயி ஆர்.தனராஜ், கிழங்கு வெட்டும் இயந்திரம் கண்டுபிடித்ததற்காக ‘ஊரக கண்டுப்பிடிப்பாளர் விருது’ பெற்ற நிலையில், அவருக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.உமா வெள்ளியன்று வாழ்த்து தெரிவித்தார்.