tamilnadu

img

ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி

ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி

ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சமரசமின்றி மார்க்சிஸ்ட் கட்சி போராடும், என நாமக்கல்லில் நடைபெற்ற கருத்தரங்கில், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய 24 ஆவது மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 - 6 தேதிகளில் நடைபெற உள்ளது. இம்மாநாட் டையொட்டி, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு கருத்தரங்கங்கள் நடை பெற்று வருகின்றன. அதன்ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம், உழவர் சந்தை அருகே அமைந் துள்ள கவின் கிஷோர் மண்டபத்தில் வியாழனன்று நடைபெற்ற கருத்த ரங்கிற்கு, மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித் தார். என்.வேலுச்சாமி வரவேற்றார். ஏ.ரங்கசாமி, பி.பெருமாள் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். ‘ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் கான போராட்டத்தில் கம்யூனிஸ்டு கள்’ என்ற தலைப்பில் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், ‘அருந்த தியர் உள் ஒதுக்கீடு போராட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பங்கு’ என்ற தலைப்பில் ஆதித் தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக் கையன் ஆகியோர் கருத்துரையாற் றினர். முன்னதாக, இக்கருத்தரங்கில், மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன் பேசுகையில், அகில இந்திய மாநாட்டை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகி றது. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக கூலி உயர்வுக்கான போராட்டம் மட்டுமல்லாமல், ஒடுக்குமுறைக ளுக்கு எதிரான போராட்டத்தையும் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 1925 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட்  கட்சி இந்தியாவில் முதல் மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டில், பூரண சுதந்திரம், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், தொழிலாளி விவசாயிகளுடைய கூட்டு போராட் டம் ஆகிய மூன்று முக்கிய தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. அன்று துவங்கிய போராட்டம் இந் தியா முழுவதும் தொடர்கிறது. ஒவ் வொரு பகுதியிலும் நடந்த போராட் டத்திலும் ஏராளமான தியாகிகளை நாம் பலி கொடுத்துள்ளோம். தெலுங் கானாவில் நடைபெற்ற போராட் டம், கையூர் தியாகிகள் போராட் டம், புன்னப்புரா வயலாரில் நடை பெற்ற போராட்டம் ஆகியவை குறிப் பிடத்தக்கவை. தெலுங்கானா போராட்டத்தில், ஏறத்தாழ 3 லட்சம் ஏக்கர் நிலங் களை நிலம் இல்லாத விவசாயிக ளுக்கு கொடுத்த மகத்தான  போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் நடத்தினர். 3000 கிராமங்களினு டைய விடுதலையை உறுதி செய்த  போராட்டத்தையும் நடத்தினர். பெண் களை அடிமையாக கொண்டிருக் கக் கூடிய ஒரு சமூகத்தில் பெண்  விடுதலை குறித்து மகத்தான முறை யில் பேசிய இயக்கம் கம்யூனிச இயக்கம். தமிழ்நாட்டில் 1980 ஆம்  ஆண்டு மதுரையில் இருக்கக் கூடிய திருப்பரங்குன்றத்தில் தியா கராஜர் பொறியியல் கல்லூரியில் படித்த இரண்டு பட்டதாரி இளை ஞர்கள் சோமசுந்தரமும் செம்புலிங் கமும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வாழும் அந்த பகுதி கள்ளச்சாராய வியா பாரிகளால் பாதிக்கப்படுகிறது. அங்கே இருக்கக்கூடிய மாணவர் கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த  அநீதிகள் தடுத்து நிறுத்தப்பட வேண் டும் என்கின்ற கோரிக்கைக்காக போராடிய காரணத்தினால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்கள். இப்படி இந்தியா முழுவதும் இறுதியாக நெல்லை தோழர் அசோக் படுகொலை வரைக்கும் கம்யூனிஸ் டுகள் ஒரு நூற்றாண்டு காலம் இந் தியாவில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக சமூக போராட்டத்தில் அநீ திக்கு எதிராக உழைப்பு சுரண்ட லுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களில் பல்லாயிரக்க ணக்கான பேரை பலி கொடுத்து இந்த இயக்கம் வளர்ந்து கொண்டி ருக்கிறது. மதுரையில் நடைபெறும் கட்சியின் அகில இந்திய மாநாடு, 5  லட்சம் பேர் பங்கேற்க கூடிய பிரம் மாண்டமான பொதுக்கூட்ட பேரணி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி  பெற்ற செந்தொண்டர் பேரணி நடை பெறுகிறது. இந்த மாநாட்டு செய் தியை மக்களிடம் கொண்டு செல் லுங்கள் மாநாட்டை வெற்றி பெற செய்யுங்கள். என்றார். இதில், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.அசோ கன், கே.தங்கமணி, எஸ்.தமிழ் மணி, சு.சுரேஷ், ஏ.டி.கண்ணன், எம். கணேசபாண்டியன், எம்.ஆர்.முரு கேசன், மாவட்டக்குழு உறுப்பினர் கள், இடைக்கமிட்டி செயலாளர் கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில், ஆர்.சந்திரமதி நன்றி கூறினார்.