மதுக்கரை ரயில்வே பாலம் புனரமைப்பு போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
கோவை, மார்ச் 22- கோவை மாவட்டம் மதுக்கரை மரப்பாலத்தில் உள்ள ரயில்வே கீழ்ப்பாலத்தில் புனரமைப்பு பணி துவங்கியுள்ள தால், சேலம் - கொச்சின் சாலையில் போக்குவரத்து மாற்றங் கள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, கோவையிலிருந்து கே.கே. சாவடி, வாளை யாறு, பாலக்காடு செல்லும் பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள் மதுக்கரை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, குவாரி ஆபீஸ் சாலை, குரும்பபாளையம் சாலை, மதுக்கரை மார்க்கெட் சாலை, செட்டிபாளையம் சாலை வழியாக செட்டி பாளையம் பிரிவை அடைய வேண்டும். இதேபோல, வாளை யாறு, பாலக்காட்டிலிருந்து கோவை, குனியமுத்தூர், உக்க டம் நோக்கி வரும் வாகனங்கள் செட்டிபாளையம் பிரிவு, விறகுக்கடை பாலம் வழியாக ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலை சாலையைப் பயன்படுத்த வேண்டும். கனரக வாகனங்கள் இந்த சாலைகளில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. கோவையிலிருந்து கே.கே. சாவடி, வாளையாறு, பாலக்காடு செல்லும் கனரக வாகனங்கள் ஆத்துப்பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, குறிச்சி, ஈச்சனாரி சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலை 544-ஐ பயன்படுத்தி, கற்பகம் கல்லூரி சந்திப்பில் வலதுபுறம் திரும்ப வேண்டும். வாளையாறு, பாலக்காட்டிலிருந்து கோவை வரும் கனரக வாகனங்கள் கற்பகம் கல்லூரி-பொள்ளாச்சி சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி, தேசிய நெடுஞ்சாலை 948 வழியாக ஈச்சனாரி, குறிச்சி சாலை மூலம் ஆத்துப்பாலம் சந்திப்பை அடைய வேண்டும். பாலம் புனரமைப்பு பணி முடியும் வரை பொது மக்கள் இந்த மாற்று வழித்தடங்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பயணத் திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, சாலை நெரிசலை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பூர்,
மார்ச் 22- திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் புலம் பெயர் தொழிலாளர்கள் ஹோலி பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்றிருந்தனர். ஹோலி பண்டிகை முடிந்து தற்போது அவர்கள் திருப்பூருக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் போன்ற பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். ஹோலி பண்டிகையைக் கொண்டாட மார்ச் 10 ஆம் தேதி முதல் சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர். மார்ச் 14 ஆம் தேதியுடன் ஹோலி பண்டிகை முடிந்த நிலையில், பனியன் நிறுவனங்கள் தொழிலாளர்களின் வருகைக்காகக் காத்தி ருந்தன. இந்நிலையில், சனிக்கிழமை முதல் புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பூருக்குத் திரும்பத் தொடங்கியுள் ளனர். தன்பாத்-ஆலப்புழா ரயிலில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பூர் வந்தடைந்தனர். இதனால், திருப் பூர் ரயில் நிலையத்தில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. திருப்பூரில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்ன லாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆண்டுக்கு ரூ. 40 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதியும், ரூ. 25 ஆயிரம் கோடி அளவுக்கு உள்நாட்டு வர்த்தகமும் நடைபெறுகிறது. புலம் பெயர் தொழிலாளர்கள் வருகையால், பனியன் நிறுவனங்கள் மீண்டும் பரபரப்பாக இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு ஆட்டோ சங்கத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், செயலாளர் உதயகுமார், பொருளாளர் மகாதேவன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, ஏடிபி சங்க மாவட்டத் தலைவர் மூர்த்தி, பொருளாளர் அன்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.