tamilnadu

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

கோவை, மார்ச் 29– பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றங்களில் ஈடுபட்ட இரு குற்றவாளிகளுக்கு ஒரே நாளில் ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொள்ளாச்சி அருகே கோமங்கலம் பகுதியைச் சேர்ந்த  21 வயது கல்லூரி மாணவி, 2019ஆம் ஆண்டு காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள் ளாக்கப்பட்டு, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சதீஷ்குமார் (35) என்பவர் மீது கோமங்க லம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீண்ட விசாரணைக்குப் பிறகு, சனிக்கிழமை கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றவாளி சதீஷ்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனையுடன் ரூ.4,000 அபராதம் விதிக்கப் பட்டது. இதேபோன்று, 2021ஆம் ஆண்டு தடாகம் பகுதியில் வீட் டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு, அவரிடமிருந்த நகைகள் கொள் ளையடிக்கப்பட்டன. இவ்வழக்கில் கருப்பையா (எ) வினோத் (25) என்பவர் மீது தடாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் சனியன்று தீர்ப்பு  வழங்கப்பட்டது. குற்றவாளி வினோத்துக்கு ஆயுள் சிறை தண்டனையுடன் ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது.