நவீன தாராளமய கொள்கையை முற்றிலும் நிராகரிப்போம்!
உழைப்பாளர் நலனை புறந்தள் ளும் நவீன தாராளமய கொள்கையை முற்றிலும் நிராகரிப்போம் என தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தலைவர்கள் சூளுரைத் தனர். ஈரோடு, மூலப்பாளையத்தில் வெள் ளியன்று பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் எம்.சீனிவாசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட் டச் செயலாளர் யு.கே.சண்முகம் வர வேற்றார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் தொடக்க உரையாற் றினார். அகில இந்திய மாநில அரசு ஊழி யர் சம்மேளனத்தின் பொதுச்செயலா ளர் ஏ.ஸ்ரீகுமார் தொழிலாளர் வர்க்கத் தின் முன்னுள்ள சவால்களும், கடமை களும் என்ற தலைப்பிலும், வங்கி ஊழி யர் சம்மேளனத்தின் துணைத்தலைவர் ராஜேந்திரன் ‘பொதுத்துறை காப் போம் - தேசம் காப்போம்’ என்ற தலைப் பில் கருத்துரையாற்றினர். தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத் தின் மாநில செயலாளர் எம்.சையத் இத் ரிஸ் நன்றி கூறினார். முன்னதாக, கருத்தரங்கில் பேசிய தலைவர்கள், ஒன்றிய மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை சூறை யாடி, தனியார் கார்ப்ரேட் நிறுவனங்க ளின் வேட்டைக்காடாக நாட்டை மாற்றி வருகிறது. இதற்கெதிரான போராட்டத் தில் ஒன்றினைந்து போராடுவோம். உழைப்பாளர் நலனை புறந்தள்ளும் நவீன தாராளமய கொள்கையை முற்றி லும் நிராகரிப்போம் என சூளுரைத்த னர்.