கோவை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஹவுஸ் கீப்பிங் கான்ட்ராக்டை தொடர பள்ளி முதல்வர் அழகேந்தி மாதம்தோறும் 20 ஆயிரம் ரூபாய் கேட்டதாக கான்ட்ராக்டர் பாண்டியன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரியான கர்னல் பாண்டியன் என்பவர் டெண்டர் முறையில் கோவை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் காண்ட்ராக்டர் தொடர தனது வீட்டுக்குத் தேவையான பராமரிப்பு பொருட்களை வழங்குமாறும் மாதம்தோறும் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்பதாகவும் கர்னல் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பள்ளி முதல்வர் அழகேந்தி கர்னல் பாண்டியனிடம் லஞ்சம் கேட்கும் வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தில்லி கேந்திரிய வித்யாலயா சங்கேதன் அமைப்பில் புகார் அளித்தார். இதையடுத்து ஐதராபாத் கேந்திரிய வித்யாலயா சங்கேதன் அமைப்பு மூலமாக பள்ளி முதல்வர் மீது துறை ரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.