tamilnadu

img

கோவையில் 6 காவலர்களுக்கு கொேரானா பாதிப்பு காவல் நிலையம் தற்காலிக மூடல்

 கோவை, ஏப்.24- கோவையில் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதனால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, பால், மருந்து பொருட்கள் மற்றும் இறைச்சி தவிர மற்ற வியாபாரங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பிற்கு இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இருபது ஆயிரத்தை கடந்துவிட்டது.

 இந்த நிலையில், கோவை மாநகர காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் போத்தனூரை சேர்ந்த இரண்டு பெண் காவலர்கள் மற்றும் ஒரு ஆண் காவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதைத் தொடர்ந்து, 3 பேரும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அங்கு பணியாற்றிய காவலர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது மேலும், தற்காலிகமாக போத்தனூர் காவல் நிலையம் வேறு இடத்தில் சில நாட்களுக்கு காவல்நிலையம் இயங்கும் என மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து காவல் நிலையத்தை தற்காலிகமாக மூட ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.