tamilnadu

img

கவியருவி மூடல்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கவியருவி மூடல்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

பொள்ளாச்சி, ஜூன் 6- கனமழையின் காரணமாக மூடப்பட்ட கவி யருவி, தற்போது வரையில் திறக்கப்படாமல் இருப்பது சுற்றுலாப் பயணிகளை ஏமாற்ற மடையச்செய்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு பூங்கா மற்றும் வால்பாறை  ஆகிய சுற்றுலாத் தலங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக வால்பாறைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கவியருவில் நீராடிய பின் னரே செல்வர். ஆனால், ஆனைமலை புலி கள் காப்பக மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து சீராக இல் லாததால், கவியருவியில் குளிப்பதற்கு வனத் துறை அனுமதி வழங்கவில்லை. அது தற் போது வரையில் தொடர்வதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.