கோவை:
கோவை நீலாம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள சக்தி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர்தின விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:அரசு பள்ளிகளில் அடுத்த வாரத்திலிருந்து நீதி போதனை வகுப்புகளும்,அடுத்த மாதம் முதல் தற்காப்பு பயிற்சி வகுப்புகளும் தொடங்கப்படவுள்ளது என்றார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கருப்பணன் பேசுகையில், தமிழகத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி முழுமையாக தடைசெய்யப்பட்டாலும் வடமாநிலங்களில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. அவற்றையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 75 சதவீதம் பிளாஸ்டிக் உபயோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.