கோவை,செப்.27- மேட்டுப்பாளையத்தில் ஐக்கிய ஜமாத் பேரவை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கூட்டமைப்பு சார்பில் வக்பு திருத்த மசோதாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஐக்கிய ஜமாத் பேரவைத் தலைவர் ஹாஜி முகமது ஷெரிஃப் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வக்பு வாரிய சொத்துக்களை அபகரிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் இந்த மசோதாவைக் கண்டித்து இஸ்லாமியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.