tamilnadu

img

உலக மகளிர் தினம் சிறப்பு இலக்கியச் சந்திப்பு

உலக மகளிர் தினம் சிறப்பு இலக்கியச் சந்திப்பு

தமுஎகச சார்பில், கோவையில் உலக மகளிர் தினம் சிறப்பு இலக்கியச் சந் திப்பு நிகழ்ச்சி நடைபெற் றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க கோவை மாவட்டக் குழு சார்பில், மகளிர் தினத்தை முன்னிட்டு, ஞாயி றன்று உலக மகளிர் தினம் சிறப்பு இலக்கியச் சந்திப்பு ஞாயிறன்று நடை பெற்றது. கோவை ரயில் நிலையம் அருகில்  உள்ள தாமஸ் கிளப்பில் நடைபெற்ற நிகழ் வில், ச.தேவரஞ்சனி வரவேற்றார். ‘படைப் பும் பெண்களும்’ என்ற தலைப்பில் கவிஞர்  த.ஜீவலட்சுமி உரையாற்றினார். இந்நிகழ் வில் எழுத்தாளர் ஈரோடு சர்மிளாவின் ‘துணிச் சல்காரி’ நூல் வெளியிடப்பட்டது. கவிஞர் சுடர்விழி நூல் அறிமுக உரையாற்றினார். எழுத்தாளர் அருள்மொழி நூலினை வெளி யிட, முனைவர் இர.மணிமேகலை, பேராசிரி யர் அன்பரசி, கவிஞர் ச.பிரியா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பெண்கள் மீதான  தாக்குதல்கள் தொடர்வதற்கு காரணம்  சமூக சீர்கேடுகளா? ஊடகச் சித்தரிப்பு களா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டி மன்றத்தில் கவிஞர் மீ.உமாமகேஸ்வரி  நடுவராகவும், சமூக சீர்கேடுகள் என்ற  தலைப்பில் வழக்கறிஞர் க.ஆ.ரேணுகா தேவி, செ.ரம்யா கிருஷ்ணன், இ.பி.பூர்நிலா ஆகியோரும், ஊடகச் சித்திரிப்புகள் என்ற தலைப்பில் வெ.மைதிலி, ப.சுவலட்சுமி, பேராசிரியர் அன்பரசி ஆகியோர் பேசினர். இந்நிகழ்வில், தமுஎகச மாவட்டச் செயலா ளர் அ.கரீம், மாநிலக்குழு உறுப்பினர் மு. ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில், இர.மனோன்மணி நன்றி கூறி னார்.