tamilnadu

img

யானைகளின் ஊடுருவலை தடுக்க புதுமையான தீர்வு!

யானைகளின் ஊடுருவலை தடுக்க  புதுமையான தீர்வு!

மேட்டுப்பாளையம், ஏப்.16 மேட்டுப்பாளையம் விவசாயி கள். மகசூலை உயர்த்தவும், யானைகளை விரட்டவும் தேனீக் களைப் பயன்படுத்தி புதுமையான தீர்வை நோக்கி செல்வது அனை வரின் கவனத்தையும் ஈர்த்துள் ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளில் வாழை மற்றும் தென்னை விவசாயம் செழித்து விளங்குகிறது. ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்திருப்பதால், இப்பகுதிக ளில் யானைகளின் ஊடுறுவல் என் பது விவசாயிகளுக்கு பெரும் சவா லாக இருந்து வருகிறது. வனத்தி லிருந்து வெளியேறும் யானைகள்  வாழை, தென்னை மரங்களை  சேதப்படுத்துவது தொடர்கதை யாக உள்ளது. யானைகளால் சேத மடையாத விவசாயிகளே இப் பகுதியில் இல்லை எனலாம். இந்நிலையில், தோட்டக்கலை மற்றும் வேளாண் துறையினரின் அறிவுரை மற்றும் பயிற்சியின் பல னாக, இப்பகுதி விவசாயிகள் ஒரு  புதிய யுக்தியை கையாண்டு வரு கின்றனர். அதுதான், தங்கள் தோட் டங்களில் தேனீக்களை வளர்ப் பது! ஒவ்வொரு ஏக்கர் வாழை மற் றும் தென்னந்தோப்பிலும் சுமார்  பத்து தேனீ பெட்டிகளை குறிப்பிட்ட  இடைவெளியில் அமைத்து தேனீக் களை வளர்த்து வருகின்றனர். இந்த  தேனீக்கள் தென்னை மற்றும் வாழை மரங்களின் பூக்களில் இருந்து தேனை சேகரிப்பதால், இயற்கையான மகரந்த சேர்க்கை நடைபெற்று மகசூல் கணிசமாக உயர்கிறது. இதுமட்டுமல்லாமல், இரவில் தோட்டங்களில் தேனீக்களின் ரீங் கார ஒலி தொடர்ந்து கேட்பதால், யானைகள் அந்தப் பக்கமே வரு வதைத் தவிர்க்கின்றன. தேனீக்க ளின் சத்தம் யானைகளுக்கு பிடிக் காதாம். அதோடு, தேனீக்கள் காதுக்குள் நுழைந்துவிடும் என்ற பயமும் அவற்றுக்கு இருப்பதால், தேனீக்கள் இருக்கும் இடத்திற்கு அவை வருவதில்லை. இதனால், யானைகளால் ஏற்படும் பயிர்  சேதம் முற்றிலுமாக தவிர்க்கப்படு கிறது. ஒரு ஏக்கர் தோட்டத்தில் பத்து தேனீ பெட்டிகள் இருந்தால், மாதம்  ஒரு லிட்டருக்கும் அதிகமான சுத்த மான தேனும் கிடைக்கிறது என்பது  கூடுதல் லாபம். மகசூல் அதிகரிப்பு,  யானை தொல்லை இல்லை, தர மான தேன் என பல நன்மைகள் இருப்பதால், மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகள் தங்கள் விவ சாய நிலங்களில் தேனீ வளர்ப்பில்  அதிக ஆர்வம் காட்டி வருகின்ற னர்.