tamilnadu

வேளாண் விரிவாக்க மையக் கட்டிடம் திறப்பு

வேளாண் விரிவாக்க மையக் கட்டிடம் திறப்பு

ஆத்தூர் அருகே ரூ.2.75 கோடி மதிப்பீட் டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக்கட்டடத்தினை, அமைச்சர் ரா.ராஜேந்திரன் திறந்து வைத்தார். சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அப் பம்ம சமுத்திரத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கி ணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டி டத்தினை, சுற்றுலாத்துறை அமைச்சர் ரா. ராஜேந்திரன் புதனன்று திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசுகையில், பயிர் காப் பீடு திட்டத்தின் கீழ் ரூ.99.98 லட்சம் மதிப் பீட்டில 2,156 விவசாயிகளுக்கு இழப்பீடாக பெற்று வழங்கப்பட்டுள்ளது. பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் 154 விவசாயிகளுக்கு ரூ.30.80 லட்சம் மதிப்பீட் டில் பாரம்பரிய விதைகள் மற்றும் இயற்கை  இடுபொருட்கள் உற்பத்தி செய்ய உபகர ணங்கள் கொள்முதல் செய்து மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று மாவட் டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக் கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. விவசாயிகளின் நலன் காக் கும் முதல்வராக தமிழ்நாடு முதல்வர் திகழ்ந்து வருகிறார், என்றார்.  முன்னதாக, மாசிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்ற அமைச் சர், அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் தூய் மைப்பணிகள் மற்றும் அலுவலகப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ் வில், மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம், வேளாண்மை இணை இயக்கு நர் ச.சிங்காரம் மற்றம் தொடர்புடைய அலு வலர்கள், விவசாயிகள் மற்றும் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கலந்து கொண் டனர்.