tamilnadu

img

ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில் விபத்தை தடுக்க யோசனை

ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில் விபத்தை தடுக்க யோசனை

எட்டாம் வகுப்பு மாணவி சாதனை

திருப்பூர், மே 7- ஆளில்லாத ரயில்வே கிராசிங் பகுதியில் உயிரிழப்பு விபத்து களை தடுப்பதற்கு திருப்பூர் தனி யார் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி ஆர்.எஸ்.சந்தோ ஷினி புதிய யோசனையை தெரி வித்திருக்கிறார்.  திருப்பூர் - அவிநாசி சாலை, எஸ்ஏபி அருகே இருக்கும் வித்யா  மந்திர் பள்ளியில் கடந்த கல்வி யாண்டில் எட்டாம் வகுப்பு படித்த மாணவி ஆர்.எஸ்.சந்தோஷினி. இவர் ஜான்சன் தொழில்நுட்பக் கல் லூரியில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்ற எஸ் இட் 12 என்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட் டியில் கலந்து கொண்டார்.  இதில் ஆளில்லாத ரயில்வே கிராசிங் பகு தியில் கவனக்குறைவாக பாத சாரிகள் ரயில் பாதையை கடப்ப தால் ஏற்படும் உயிரிழப்பு விபத்து களை தடுப்பதற்கு புதிய கண்டு பிடிப்பை செய்துள்ளார்.  இதன்படி ஆளில்லாத ரயில்வே கிராசிங் பகுதியில் சாலையின் இரு புறமும் இரண்டு தானியங்கி படிக் கட்டுகளை அமைத்து, ரயில் வரும் போது, ரயில்வே கேட் மூடப்பட்டு விட்டால், தானியங்கி படிக்கட்டு கள் இயங்கத் தொடங்கும். அப் போது ரயில் பாதையை கடக்க வேண்டியவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை. தானியங்கி படிக்கட்டுகளில் ஏறி இருபுறமும் செல்லலாம். ரயில் கடந்து சென்ற பிறகு, ரயில்வே கேட் திறக்கும் போது தானியங்கி படிக்கட்டு இயக்கம் நின்று விடும். இந்த “மாதிரி திட்டத்தை” சந்தோஷினி செயல்படுத்தி காட்டினார். இந்த திட்டத்தை வடிவமைத்த தற்கு உரிய காரணத்தையும் அவர் விளக்கி இருந்தார். கடந்த 2024 ஆம்  ஆண்டு இந்தியாவில் ஆளில்லாத கிராசிங்கில் ரயில் பாதையை கடக்க முயன்று 1151 பேர் உயிரிழந்துள்ள னர். ஆளில்லாத ரயில்வே கிராசிங் கில் விபத்து உயிரிழப்புகளை தடுப் பதற்காக அரசு 551 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே இது போன்ற பகுதிகளில் தானி யங்கி படிக்கட்டுகளை அமைத்து விட்டால் முதியோர், கர்ப்பிணிகள், அவசர வேலைக்கு செல்ல வேண் டியோர் யாரும் காத்திருக்க வேண் டியது இல்லை. ரயில் வரும்போது கூட அவர்கள் தானியங்கி படிக் கட்டுகள் வழியாக கடந்து செல்ல முடியும் என்று சந்தோஷினி விளக் கினார். இவர் பங்கேற்ற போட்டியில் இளம் ஐன்ஸ்டீன் பிரிவில் இரண் டாவது இடத்தை பிடித்தார். இவ ருக்கு சான்றிதழும் பரிசு தொகை ரூ.750 வழங்கப்பட்டது. இத்துடன் அடுத்த கட்டமாக சர்வதேச அள வில் மலேசியாவில் நடைபெறும் போட்டிக்கான தேர்வு நடைபெறும். இவரது கண்டுபிடிப்பு அதில் வெற்றி பெற்றால், இவர் மலேசி யாவிற்கு செல்வதற்கான வாய்ப்பு  உள்ளது. இவர் கண்டுபிடித்திருக் கும் மாதிரி வடிவமைப்பில் ஆட் கள் கடந்து செல்வதற்கு வழி முறை உள்ளது. தனிப்பட்ட முறை யில் சிறிய அளவில் செய்த இந்த  கண்டுபிடிப்பை, அரசு உள்வாங் கிக் கொண்டு மிகப்பெரிய திட்ட மாக வடிவமைத்து வாகனங்கள் கடந்து செல்லவும் புதிய வடிவ மைப்பை உருவாக்க முடியும் என்று சந்தோஷினி கூறினார். வரும் கல்வியாண்டில் ஒன்ப தாம் வகுப்பு படிக்கப் போகும் மாணவி சந்தோஷினியின் கண்டு பிடிப்பு நல்ல வரவேற்பை பெற் றுள்ளது. பள்ளி நிர்வாகத்தினர் மற் றும் மாணவர்கள், சுற்றத்தார் இவ ருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.