அரசுப்பள்ளி அருகே சுகாதார சீர்கேடு
ருச்செங்கோடு அருகே செயல் பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அருகே சுகாதார சீர்கேடு ஏற் பட்டுள்ளதால், மாணவர்களுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள் ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே உள்ள 85 கவுண்டம் பாளையம் ஊராட்சி, ராயபாளையம் குடித்தருவி பகுதியல் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் பின்புறத்தில், குடியிருப்பு பகுதியிலி ருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது இதனால் மாணவர்க ளுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாணவர்களின் நலன்கருதி, சாக்கடை கழிவுநீர் வெளியேற்றுவதற் கும், மீண்டும் தேங்காதவாறு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள் ளனர்.
விதை பரிசோதனை உபகரணங்கள் திருட்டு
கோவை, மார்ச் 24- தடாகம் சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை பரிசோதனை மையத்தில் இருந்து விதை பரிசோதனை உபகரணங்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தின் விதை பரிசோதனை மையத்தில், விதை பரிசோதனை அதிகாரியாகப் பணிபுரியும் நர்கீஸ்(51) என்பவர், மையத்தின் கிடங்கை திறந்துள்ளார். அங்கு 2007 ஆம் ஆண்டு முதல் பூட்டி வைக்கப்பட்டிருந்த ரூ.30,000 மதிப்பிலான உபகரணங்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து நர்கீஸ் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப் படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.