கழிவுகளை எரியூட்டுவதால் சுகாதார சீர்கேடு
சேலம், ஜூன் 21- குடியிருப்பு பகுதி அருகே கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை எரியூட்டுவதால், பொதுமக்கள் அவதிக்குள் ளாகி வருகின்றனர். சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள கண் ணந்தேரி ஊராட்சிக்குட்பட்ட குப்பை கழிவுகளை, ஏரிக்கரை அருகே கொட்டி வைத்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் எரி யூட்டப்படுகிறது. இதனால் எழும் புகையால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருவ தோடு, உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டு பெரும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். இதனிடையே, தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையின ருக்கு தகவலளித்தனர். அதன்பேரில் வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த குப்பைக்கழிவுகளை முற் றிலும் அணைத்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், குடியிருப்பு அருகே குப்பை கழிவுகளை எரி யூட்டாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென, வலியுறுத்தினர்.