tamilnadu

img

கோவில் இடங்களில் வசிப்பவர்கள், விவசாயிகளுக்கு பட்டா வழங்கிடுக

கோவில் இடங்களில் வசிப்பவர்கள், விவசாயிகளுக்கு பட்டா வழங்கிடுக

அடிமனை பயனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, ஏப்.17- கோவில், வக்பு இடங்களில் வசிப்பவர்கள், விவசாயம் செய் பவர்களுக்கு கிரயப்பட்டா வழங்க வேண்டும், என வலியுறுத்தி அடி மனை பயனாளிகள், குத்தகை விவ சாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல தலைமுறைகளாக கோவில் இடங்களில் குடியிருப்ப வர்கள், சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு அறநிலையத்துறை சட் டப்பிரிவு 34இன்படி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு நியாயமான விலையை தீர்மா னித்து கிரயப்பட்டா வழங்க வேண் டும். கிரயப்பட்டா கோரிக்கை நிறை வேறும் வரை பயனாளிகளுக்கு வாடகையை சட்டப்பிரிவு 34ஏ-ன் படி, மக்களின் வாழ்நிலைக்கேற்ப குறைந்தபட்ச வாடகையை நிர்ண யம் செய்ய வேண்டும். 2019 இல்  வெளியிடப்பட்ட அரசாணை 318யை செயல்படுத்த சட்டமன்றத் தில் அறிவித்தப்படி சீராய்வு மனுவை மாநில அரசு உடன் தாக் கல் செய்ய வேண்டும். கோவில்  பெயரில் எந்தவிதமான ஆவணங்க ளும் இல்லாத, இனாம் நிலங் கள், பலவகை புறம்போக்கு இடங் களை யூடிஆர்-இல் தவறுதலாக  பெயர் மாற்றம் ஆகியுள்ள சொத் துக்களின் மீது அறநிலையத்துறை  உரிமம் கோருவதை கைவிட வேண் டும். அறநிலையச் சட்டப்பிரிவுகள் 72பி, 78, 78ஏ, 79சி ஆகிய பிரிவுக ளின் கீழ் பயனாளிகளை ஆக்கிர மிப்பாளர்கள் என அறிவித்து நட வடிக்கை எடுப்பதை கைவிட வேண் டும். வக்பு போர்டு இடங்களில் குடி யிருப்பவர்கள், சாகுபடி செய்ப வர்களுக்கும் பட்டா வழங்க வேண் டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசா யிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வியா ழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை மாவட்டம், பொள் ளாச்சியில் திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை வகித் தார். விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் வி.ஆர்.பழனிச் சாமி, பொருளாளர் கே.மகாலிங் கம், தென்னை விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் பழ னிச்சாமி ஆகியோர் சிறப்புரையாற் றினர். இதில் விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் ஏ.ஈஸ்வரன், அடி மனை பயனாளிகள் சங்க தலைவர்  எம்.குணசேகரன், செயலாளர் கே. முரளிதரன், பொருளாளர் வி. முத்துக்குமார், திருமூர்த்திமலை கோவில் அறங்காவலர் தேவராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி இந்து சமய அறநிலை யத்துறை அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாது காப்பு சங்கத்தின் மாவட்டத் தலை வர் கே.என்.மல்லையன் தலைமை  வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.அன்பு, தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் சோ.அருச்சுனன், தலைவர் எம்.குமார், பொருளாளர் சி.வஞ்சி, துணைத்தலைவர் எஸ்.தீர்த்தகிரி, துணைச்செயலாளர்கள் ஆ.ஜீவா னந்தம், வி.குழந்தைவேல், உதய குமார் உட்பட பலர் கலந்து கொண்ட னர். திருப்பூர் திருப்பூர் அரிசிக்கடை வீதியி லுள்ள இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவல கம் முன்பு, நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் பி.பெருமாள், மாவட் டச் செயலாளர் ஆர்.குமார், அடி மனை பயனாளிகள், குத்தகை விவ சாயிகள் பாதுகாப்பு சங்க மாவட் டச் செயலாளர் ஆர்.வெங்கட்ரா மன், பொருளாளர் சி.ஈஸ்வர மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பி னர் பி.வேலுச்சாமி, மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்டத் தலைவர்  த.ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.