tamilnadu

img

மார்ச் 14 இல் சேலத்தில் பிரம்மாண்ட மாநாடு

மார்ச் 14 இல் சேலத்தில் பிரம்மாண்ட மாநாடு

தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப்பெற வேண் டும், என வலியுறுத்தி சேலத்தில் மார்ச் 14 ஆம் தேதியன்று பிரம் மாண்ட மாநாடு நடைபெற உள்ள தென, அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஒன்றிய அரசைக் கண்டித்து சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டு தயாரிப்பு கூட்டம், சேலம் வி.பி.சிந்தன் நினைவகத்தில் புத னன்று நடைபெற்றது. சிஐடியு மாவட்ட உதவித்தலைவர் எஸ்.கே. தியாகராஜன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், ஒன்றிய அரசு தொழி லாளருக்கு எதிராக நான்கு தொழிலா ளர் நலச்சட்டங்களை கொண்டு வந் துள்ளது. இதனை உடனடியாக திரும் பப்பெற வேண்டும். விவசாயிக ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை  அமல்படுத்த வேண்டும். முறைசாரா  தொழிலாளர்களுக்கு சமூக சட்ட பாதுகாப்பு உருவாக்க வேண்டும். பணமயமாக்கல் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு தாரை வார்க்கக்கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சேலம் கோட்டை மைதானத் தில் மார்ச் 14 ஆம் தேதியன்று பிரம் மாண்ட மண்டல மாநாடு நடைபெற உள்ளது. சுற்றுலாத்துறை அமைச் சர் இரா.ராஜேந்திரன் துவக்கி வைக்க வுள்ளார், என முடிவு செய்யப்பட் டது. இக்கூட்டத்தில், சிஐடியு மாவட் டச் செயலாளர் ஏ.கோவிந்தன், தலை வர் டி.உதயகுமார், பொருளாளர் வி. இளங்கோ, மாநிலக்குழு உறுப்பினர் கள் ஆர்.வெங்கடபதி, பி.பன்னீர் செல்வம், சிஐடியு நாமக்கல் மாவட் டத் தலைவர் அசோகன், தருமபுரி மாவட்டத் தலைவர் ஜீவா, நிர்வாகி ஸ்ரீதர், எல்பிஎப் நிர்வாகி பொன்னி.பழனியப்பன், ஏஐடியுசி நிர்வாகி முனிசாமி, எச்எம்எஸ் நிர்வாகி கணேசன், ஐஎன்டியுசி நிர்வாகி நட ராஜன், ஏஐசிசிடியு நிர்வாகி வேல் முருகன், ஏஐயூடிசிசி நிர்வாகி மோகன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.