ஏப்.29இல் பொது வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு
கோவை, ஏப்.20- மே 20 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தை முன்னிட்டு, அதற் கான ஆயத்த கோவை மாவட்ட மாநாடு ஏப்.29 ஆம் தேதி நடை பெறவுள்ளது. அகில இந்திய தொழிற்சங்கங் கள் தேசிய மேடையிலும், மாநில அளவிலும் எடுக்கப்பட்ட முடிவு களின்படி, வரும் மே 20 ஆம் தேதி யன்று அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, கோவை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சனியன்று காட்டூரிலுள்ள ஏஐடியுசி அலுவ லகத்தில், சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில், பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு, ஏப்.25 ஆம் தேதி இபிஎப் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்; ஏப்.29 ஆம் தேதி யன்று ஆயத்த மாவட்ட மாநாட்டை ஏஐடியுசி கூட்டரங்கில் நடத்துவது; மே 3 ஆம் தேதி வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்குவது; மே 12, 13, 14 ஆகிய தேதிகளில் பிரச்சார இயக்கங்கள் நடத்துவது; மே 20 ஆம் தேதி மாவட்டத்தில் 6 மையங்க ளில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், கோவை மற்றும் திருப் பூர் மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் ஒப்பந்தக் கூலி உயர்வு, மின்கட்டணக் குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட் டத்திற்கு ஆதரவு அளிப்பது, அகில இந்திய வேலை நிறுத்தம் வெற்றி பெற செய்திட அனைத்து தொழிற் சங்கங்கள், தொழில் வர்த்தக அமைப்புகள் ஆகியோரிடம் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுவது என வும் கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது. இக்கூட்டத்தில், சிஐடியு மாவட் டப் பொருளாளர் ஆர்.வேலுச்சாமி, நிர்வாகிகள் கே.ரத்தினகுமார், எம்.ஆனந்த்குமார், தொமுச நிர்வாகி துரை, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எம்.ஆறுமுகம், கவுன் சில் செயலாளர் தங்கவேலு, ஐஎன் டியுசி சண்முகம், எச்எம்எஸ் மாநிலச் செயலாளர் டி.எஸ்.ராஜா மணி, எம்எல்எப் நிர்வாகி சாஜகான், எல்டியுசி நிர்வாகி ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.