tamilnadu

திருப்பூர் மண்ணின் நான்கு தியாகிகள்

திருப்பூர் மண்ணின் நான்கு தியாகிகள்

இந்தியா சுதந்திரம் பெற்ற ஆரம்ப ஆண்டுகளில் இருந்து, நவீன தாராளமய சுரண்டல் கொள்கை அமலாக்கத் தொடங்கியது வரை இடைவிடாத போராட்டத் தில் திருப்பூர் மண் நான்கு தியாகிகளை பெற்றிருக்கிறது.  ஆசர் மில் பழனிச்சாமி: 1950 ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சி மீது தடை விதித்து கம்யூனிஸ்ட் தலைவர்களையும், ஊழியர்களையும் நரவேட்டையாடியது.  அப்போதுதான் திருப்பூரில் தொழிலாளி வர்க்கத்தின் இளம் தலைவர் ஆசர் மில் பழனிச் சாமி கம்யூனிஸ்ட் கட்சியில் துடிப்புடன் செயல்பட்டார். எதற்கும் அஞ்சாத ஆசர் மில் பழ னிச்சாமியை வஞ்சகமாக பிடித்த காவல்துறை, கம்யூனிஸ்ட் தலைவர்களையும், கட்சி யின் செயல்பாட்டையும் சொல்லும்படி கேட்ட போதும், கொடூரமாக சித்தரவதை செய்த  போதும் அவர் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை. இதனால் 75 ஆண்டுகளுக்கு  முன்பே 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி அவரை போலி என்கவுன்ட்டர் முறையில்  சுட்டுக் கொன்றது. சீராணம்பாளையம் பழனிச்சாமி: 1978 ஆம் ஆண்டு விசைத்தறி தொழிலாளர்கள் நியாயமான கூலி உயர்வு கோரி சிஐடியு தலைமையில் வலிமைமிக்க போராட்டத்தை திருப்பூரின் மேற்கு ஏரியா வில் நடத்தினர். அந்தப் போராட்டத்தை சீர்குலைப்பதற்கு அப்போதிருந்த முதலாளிகள்  கருங்காலிகளைக் கொண்டு முயற்சித்தனர். இந்தப் போராட்டத்திற்கு தலைமை ஏற்று தொழிலாளர்களை அணிதிரட்டிய சிஐடியு சங்க தலைவர்களை குறி வைத்து தாக்குதல்  தொடுக்க திட்டமிட்டனர். 13 வீடுகள் இடித்து நொறுக்கப்பட்டன. அந்தப் போராட்டத்தின் போது 1979 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இளம் பனியன் தொழிலாளியாக இருந்த சீரா ணம்பாளையம் பழனிச்சாமியை கருங்காலி கூட்டம் இரவு நேரத்தில் ஒளிந்திருந்து, கொடூரமான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தது. கேத்தம்பாளையம் பன்னீர்செல்வம்: நவீன தாராளமயக் கொள்கைகள் காலகட்டம் தொடங்கிய பின்னணியில், கேத்தம் பாளையம் பன்னீர்செல்வம் பிச்சம்பாளையம் பகுதியில் மக்களின் செல்ல பிள்ளையாக,  தொழிலாளர்களின் உரிமைக் காவலனாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் சிஐடியு விலும் செயல்பட்டு வந்தார். ஜீனா கார்மெண்ட்ஸ் என்ற பனியன் நிறுவனத்தில் தொழி லாளர்களை சங்கம் சேர்த்து அவர்களது உரிமைக்காக குரல் கொடுத்த போது, அந்த  நிறுவனத்தின் உரிமையாளர் கூலிப்படையை ஏவி விட்டார். 1998 ஆம் ஆண்டு மார்ச்  17 அன்று மாலை நேரத்தில் கூலிப்படையினர் கேத்தம்பாளையம் பன்னீர்செல்வத்தை கொடூரமாக வெட்டிக் கொன்றனர். அவரைக் கொன்ற கொலைகாரர்களில் ஒரு வரை பாரதிய ஜனதா கட்சி பகிரங்கமாக விழா நடத்தி தனது கட்சியில் சேர்த்துக் கொண்டது.  இடுவாய் கே.ரத்தினசாமி: இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளையை தொடக்கி விளையாட்டு போட்டி, மக்கள் ஒற்றுமை பொங்கல் திருவிழா நடத்தி வந்த இளைஞர்களில் ஒருவர்தான்  கே.ரத்தினசாமி. உள்ளூரின் பல்வேறு பிரச்சனைகளில் இளைஞர்களின் செயல்பாடு  மக்களுக்கு மிகவும் பிடித்துப் போக அவர்கள் ஆதரவளித்தனர். அந்த இளைஞர்களில் ஒருவரான ரத்தினசாமி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தலைவராக வெற்றி பெற் றார். தனது குறைந்த அதிகாரத்தைக் கொண்டே மக்களுக்கு அதிகபட்சமாக என்ன  செய்ய முடியும் என்பதை செய்து காட்டினார். இதனால் மக்கள் செல்வாக்கு நாளுக்கு  நாள் அதிகரித்தது. அதேசமயம் உள்ளூரில் ஆதிக்கம் செலுத்திய பிற்போக்கு சக்திகள் அதிகாரம் இழந்த நிலையில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின்கே. ரத்தினசாமியை வீழ்த்துவதற்கு எல்லா கட்சிகளும், ஆதிக்க சக்தி களும் புனிதக் கூட்டு சேர்ந்தனர். எல்லாக் கட்சிகளும் கூட்டணி சேர்ந்த போதும் மக்களு டன் கூட்டணி சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் ரத்தினசாமி மகத்தான வெற்றி பெற் றார். இரண்டு முறை வெற்றி பெற்றதால் இனி நிரந்தரமாக அதிகாரம் பறிபோய்விடும்  என்று 2002 ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி கொடூரமாக சித்திரவதை செய்து ரத்தின சாமியை கொலை செய்தனர்.  இந்தியாவின் சாபக்கேடாக இருக்கும் சாதியம், மதவாதம், பொருளாதார ஏற்றத் தாழ்வு, சாமானிய மக்களின், உழைப்பாளர்களின் ஜனநாயக உரிமை பறிப்பு என நாடு  விடுதலை பெற்று 78 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்வது வேதனையானது. அதற்கு  எதிராகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. அந்தப் போராட் டத்தில் உயிரை தியாகம் செய்தவர்கள் தான் திருப்பூரின் நான்கு தோழர்களும்.  எத்தனை இடர் வந்தாலும் போராட்டம் ஓயாது. தியாகிகளின் நினைவுகளுடன், லட்சிய  உறுதியுடன் செங்கொடி இயக்கம் மென்மேலும் முன்னேறிச் செல்லும்.