காவிரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்
சேலம், ஏப்.27- எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கதவணை மின்நிலையத்தில் பராம ரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் விசைப்படகு போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்துள்ள பூலாம் பட்டி காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கதவணை மின் நிலையத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். அதனடிப்படையில் சனியன்று மாலை முதல் தடுப்பணைகள் மூலம் நிறுத்தி வைக்கப்பட் டுள்ள தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து ஞாயிறன்று பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத னால் பூலாம்பட்டிக்கும், நெருஞ்சிபேட்டைக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே இயக்கப்பட்டு வந்த விசைப் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றை கடந்து செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி நகரம், ஒன்றியம் மற்றும் கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி ஆகிய ஒன்றிய பகுதிகளுக்கு செல்லும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குவதில் சிரமம் ஏற்படுவதாகவும், அதனால் பொது மக்கள் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அதிகா ரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
கோவை, ஏப்.27- கோவை மாநகராட்சி மேயர் பங்களாவில் வெடி குண்டு வைத்ததாக மிரட் டிய, மாநகராட்சி தற்காலிக ஊழியரை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சனியன்று இரவு அழைத்த நபர் ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி மேயர் ரங்கநா யகி ராமச்சந்திரன் வசித்து வரும் பங்களாவில் வெடி குண்டு வைத்துள்ளேன். சரி யாக 10 மணியளவில் வெடித்து விடும், எனக்கூறி இணைப்பை துண்டித்துள் ளார். இதையடுத்து வெடி குண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உத வியுடன் மாநகராட்சி மேயர் பங்களாவில் சோதனை மேற்கொண்டனர். அப் போது அது வெறும் புரளி என தெரியவந்தது. இதனி டையே, செல்போனில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர். அதில், கவுண் டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (40) என் பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட தில், அவர் மாநகராட்சியில் தற்காலிக பிளம்பராக வேலை செய்து வந்ததும், குடும்ப பிரச்சனை தொடர் பாக அவர் காவல் நிலை யத்தில் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற் காக, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறை யில் அடைத்தனர்.
நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் பணி துவக்கம்
சேலம், ஏப்.27- ஓடைகள் மற்றும் கசிவுநீர் குட்டை களில், நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் பணியை அமைச்சர் ராஜேந்திரன் ஞாயிறன்று துவக்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள 52 ஓடைகள் மற்றும் கசிவுநீர் குட்டைகளில் ரூ.15.68 லட்சம் மதிப்பீட்டில் ஒருங் கிணைந்த நீர்வடிப்பகுதி நீர் சேக ரிப்பு கட்டமைப்புகள் பராமரிப்பு பணி களை சுற்றுலாத்துறை அமைச்சர் ரா. ராஜேந்திரன் ஞாயிறன்று துவக்கி வைத் தார். ஆத்தூர் வட்டம், மல்லியக்கரை யில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். அப்போது அமைச்சர் பேசுகையில், 2021 - 22 ஆம் ஆண்டு முதல், வேளாண்மைப் பொறியியல் துறையிலுள்ள இயந்தி ரங்களை பயன்படுத்தி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. விவசாய நீர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு மழைநீரை சேகரித்து, நிலத்தடி நீர்மட்டத்தினை அதிகரிக்க, நீர்வடிப்பகுதிகளில் சமு தாய குளங்கள் போன்ற மண் வேலை மட்டும் கொண்ட புதிய நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில், ஓடைகள் மற்றும் கசிவுநீர் குட்டைகளில் 52 பணிகள் ரூ.15.68 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் கூடுதலாக 31 ஆயிரம் கனமீட்டர் நீர் சேகரிப்பதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் அருகிலுள்ள சுமார் 300 விவசாயிகள் பயனடைவார்கள். மேலும், சேலம் மாவட்டத்திற்குட் பட்ட, நீர்வளத்துறையின் ஆறுகள் மற் றும் வழங்கு வாய்க்கால்கள் தூர்வா ரும் பணிக்காக ரூ.2.20 கோடி நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டு, ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கூடுதல் இயந் திரங்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட கால அளவில் பணிகளை முடித்திடவும், இப்பணிகளை நாள்தோறும் கண் காணித்து அறிக்கை வழங்கிட அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில் கள்ளக் குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே. மலையரசன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், சுந்தரம், வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சரவையிலிருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி விடுவிப்பு
சென்னை, ஏப்.27- தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அமைச் சரவையில் 6 ஆவது முறையாக மாற்றம் செய் யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் இருந்து மின் சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, சில அமைச்சர்களின் பதவிகள் மாற்றப்பட்டு பதவியில் இருக்கும் அமைச்சர்களுக்கு கூடு தல் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரான அம லாக்கத்துறை வழக்கில் ஜாமினா? அமைச் சர் பதவியா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளார். இதேபோல், வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சைவம், வைணவம் என குறிப்பிட்டு பெண்களை இழிவாக பேசியதால் பொன்முடிக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அமைச்சரவை யிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்களுக்கு, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துச் சாமிக்கு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. பொன்முடி வகித்த வனத்துறை, அமைச் சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. கூடுதலாக கைத்தறித்துறை யும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச் சரவையில் மனோ தங்கராஜ் மீண்டும் சேர்க் கப்பட்டுள்ளார். மனோ தங்கராஜூக்கு ஒதுக் கப்பட்டுள்ள இலாகா குறித்து அறிவிக்கப்பட வில்லை. இந்நிலையில், ஆளுநர் மாளிகை யில் திங்களன்று (இன்று) மாலை 6 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அமைச் சர்களாக இருந்த செந்தில் பாலாஜி, பொன் முடியின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஆளு நர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.