எஸ்பி அலுவலகம் முன்பு விவசாயி தற்கொலை முயற்சி
தருமபுரி, ஜூன் 5- உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரைக் கண்டித்து, விவசாயி ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளித்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி அருகே உள்ள கீழ் ராஜா தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (52). இவரது மனைவி இறந்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வசித்து வருகிறார். இவர்க ளுக்கு சொந்தமாக ஒன்றரை ஏக்க ரில் விவசாய நிலம் உள்ளது. அதில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கடன் பிரச்சனை காரணமாக தனது நண் பர் செல்வராஜ் என்பவரிடம், தனது நிலத்தின் பத்திரத்தை வைத்து ஜெயராமன் பணம் கேட்டுள்ளார். பத்திரத்தை பெற்றுக்கொண்ட செல்வராஜ், ரூ.10 லட்சத்திற்கு பத் திரத்தை அடமானம் வைத்து அதில் மூன்று லட்சம் மட்டும் ஜெயராமனி டம் கொடுத்துவிட்டு மீதி 7 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள் ளார். இதுகுறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் ஜெயராமன் புகாரளித்தார். அதன் பேரில் விசாரணை செய்து செல்வ ராஜிடம் இருந்து ஒரு பத்திரத்தை வாங்கிக் கொடுத்துள்ளனர். மீத முள்ள மற்றொரு பத்திரத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்த தால் ஜெயராமன் மன உளைச்ச லில் இருந்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் எந்தவித நடவ டிக்கையும் எடுக்காமல் இருந்த தால், ஜெயராமன் புதனன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில் மனு கொடுக்க வந்துள் ளார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண் ணெயை எடுத்து மேலே ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதனை சிறிதும் எதிர்பார்க்காத போலீசார் தீயை அணைத்து, அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனும தித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரி வில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெய ராமனுக்கு 60 சதவிகிதம் தீக்கா யங்கள் ஏற்பட்டதாக மருத்துவர் கள் தெரிவித்துள்ளனர்.
மது போதையில் இளைஞர்கள் ரகளை டாஸ்மாக் கடையை மாற்றக் கோரிக்கை
சேலம், ஜூன் 5- சேலத்தில் மதுபோதையில் இளைஞர் கள் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட நிலை யில், மதுபானக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும், என்ற கோரிக்கை எழுந் துள்ளது. சேலம் மாநகரத்தின் மையப் பகுதியில் சேலம் மத்திய பேருந்து நிலையம் அமைந் துள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையம் அருகே, ஒரே இடத்தில் 5க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு மதுபானம் வாங்குவோர் சாலையிலேயே மது அருந்திவிட்டு, அவ் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தனர். இதனிடையே, மதுபானக் கடை களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வியாழனன்று 3 இளைஞர்கள் மது அருந்திவிட்டு, அரசு போக் குவரத்து பணிமனை முன்பு ரகளையில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பள்ளப்பட்டி காவல் துறையினர், 3 பேரை யும் பிடித்துச் சென்று விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும், தொடர்ந்து இதுபோன்ற செயல்கள் நடைபெற்று வருவ தால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், மது பானக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்
சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மறியல்
தருமபுரி, ஜூன் 5- பென்னாகரம் அருகே சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சி, புதூர் காலனி பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக் கத் தொட்டி அமைக்கப்பட்டது. இத்தொட்டி மேடான பகுதியில் உள்ளதால் மின் மோட் டார் மூலம் நீரேற்றம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரி வித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீரும் சீராக விநியோகிக்கப்படாததால், குடிநீ ருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில், சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் ஏரியூர் - பென்னாகரம் சாலை யில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஒகேனக் கல் காவல் ஆய்வாளர் முரளி, கூத்தப்பாடி ஊராட்சி செயலர் குமரன் ஆகியோர் போராட் டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். அதில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளிக்கப்பட்டது. அதன்பேரில், போராட் டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீர் ஏற்றம் செய்து தற்காலிகமாக குடிநீர் தட் டுப்பாடு சரி செய்யப்பட்டது.