ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ அலுவலகம் திறப்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பி னர் வி.சி.சந்திரகுமார் அலுவலகம் ஈரோடு அகில்மேடு வீதியில் திறக்கப் பட்டது. தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி அலுவலகத்தை திறந்து வைத்தார். அலுவலக திறப்பு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார் கூறியதாவது: “இந்த அலுவலகம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். பொதுமக்கள் என்னை WhatsApp மற் றும் செல்போன் மூலம் தொடர்பு கொள் வதற்காக விரைவில் ஒரு எண்ணை அறி விக்க உள்ளேன். அந்த எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு குறை களைத் தெரிவிக்கலாம். மக்களின் குறைகளை எவ்வளவு விரைவாக முடி யுமோ, அவ்வளவு விரைவாக தீர்ப்ப தற்கு நான் பாடுபடுவேன்” என்று கூறி னார். அமைச்சர் சு.முத்துசாமி கூறுகை யில், “56 கோடி ரூபாய் மதிப்பில் சுத்திக ரிப்பு நிலையம் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கப்படும். துறை சார்ந்த ஆய்வுகளை நடத்தி சட்டமன்றத் தில் ஒவ்வொன்றையும் விரிவாக தெரி விக்கிறோம்” என்றார். இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மாநக ரக் கழக செயலாளர் மு.சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன், நகரச் செயலாளர் வி. பாண்டியன், கனகராஜ், மூத்த தோழர் கள் கே.துரைராஜ் மற்றும் ப.மாரி முத்து, இந்து கல்வி நிலைய தாளா ளர் கே.கே.பாலுசாமி, இந்தியா கூட் டணி கட்சித் தலைவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை: வெப்பம் தணிந்து குளுகுளு காலநிலை
கோடை காலம் துவங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந் நிலையில், கடந்த இரண்டு நாட்க ளாக பரவலாக மிதமான மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளுகுளு சூழல் நிலவி வருகிறது. கோவை மாவட்டம், அன்னூர், மேட்டுப்பாளையம், சிறுமுகை, கருமத்தம்பட்டி, சூலூர், மதுக் கரை, எட்டிமடை, பொள்ளாச்சி உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும், நகரப் பகுதியில் பல இடங்களிலும் பர வலாக மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல கோவை மாவட்டத்தில் தமிழக – கேரளம் வாளையார் மற்றும் கஞ்சிக்கோடு பகுதிகளிலும் இடியுடன் கன மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் பரவ லாக பெய்து வரும் மழை காரண மாக குளுகுளு சூழல் நிலவி வரு கிறது. வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவுவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் மேற்கு மாவட் டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப் பிடத்தக்கது.