tamilnadu

தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்

கோவையில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில், தனியார் துறையின் பங்களிப்போடு அரசு இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கோவை நவ இந்தியா பகுதியில்  உள்ள இந்துஸ்தான் கல்லூரியில், தமி ழக அரசு சார்பில் சனியன்று, வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், தமிழ்நாடு மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை  அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசினார். “இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்தோம். அதைவிட அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். ஏறத்தாழ 295 நிறுவ னங்கள் இந்த முகாமில் பங்கேற்று, 20  ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்க தயாராக உள் ளன. எனவே, வேலை தேடி வந்திருக் கும் சகோதர, சகோதரிகள் தங்களுக்கு பிடித்த நிறுவனங்களை தேர்வு செய்து,  வேலை வாய்ப்புகளைப் பெற வேண் டும். போட்டி தேர்வுக்கு தயாராக சிறந்த  நூலகம் தேவை என்பதால், கோவை யில் 300 கோடி ரூபாய் செலவில் பிர மாண்ட நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும். சிரமப்பட்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த நூலகம் வரப் பிரசாதமாக இருக்கும். அதேபோல, கோவையில் 45 ஏக்கர்  பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன்  பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள் ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு முகாம்களை அரசு, தனியார் துறையுடன் இணைந்து  நடத்தி வருகிறது. கோவை விமான  நிலைய விரிவாக்கத்திற்கு நிலம்  கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக் கப்பட்டுள்ளது. இதுபோல, கோவைக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த  வேலைவாய்ப்பு முகாம் உங்களுக் காக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வேலை தேடி வந்திருப்பவர் கள் தங்களுக்கு தகுந்த நிறுவனங் களை தேர்ந்தெடுத்து, பணி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார். முன்னதாக பாஜக  தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசியல் கோமாளி களை பற்றி பேசி நேரத்தை விரய மாக்க வேண்டாம். ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்போன் என்றார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மேயர்  ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர்  சிவகுரு பிரபாகரன், எம்பி கணபதி ராஜ்குமார், துணை மேயர் வெற்றிச் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சைனிக் பள்ளியின் 63ஆவது ஆண்டு விழா 

திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதிநகர் சைனிக்  பள்ளியின் 63ஆவது ஆண்டு விழா மற்றும் இறுதி அணி வகுப்பு சனியன்று நடைபெற்றது.  சைனிக் பள்ளியின் 63 ஆவது ஆண்டு விழாவை யொட்டி, இதில், 12ஆம் வகுப்பு மாணவர்களின் பாஸிங்  அவுட் அணிவகுப்பு (இறுதி அணிவகுப்பு) மேஜர் ஸ்ரீ  ராம்குமார் சதுக்கத்தில் நடைபெற்றது. கேடட் ஷெஷாங்  நாயக் அணிவகுப்பு தளபதியாக வழி நடத்தினார். மாணவர் களின் அணிவகுப்பு மரியாதையை பொள்ளாச்சி நாடாளு மன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில், கேடட் ஜனபிரியன் சிறந்த கேடட் மற் றும் கேடட் நரேந்திரன் சிறந்த ஒழுக்கத்திற்கான ஒட்டு மொத்த கோப்பையையும் பெற்றனர். இந்திய விமானப் படையின் சிறப்புப் பிரிவு கருடன் கமாண்டோஸ் ஆயுதக் காட்சி, இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்பு நிலைப் பாடு மற்றும் தன்னம்பிக்கைக்கான அதன் அர்ப்பணிப்பு ஆகி யவற்றை வெளிப்படுத்தியது. விழாவையொட்டி, செயற்கை நுண்ணறிவு, ரோ போடிக்ஸ், கணிதம், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல், மொழி யியல் மற்றும் கலைகள், புத்தக கண்காட்சி ஆகியவை நடை பெற்றன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. நடப்பு கல்வியாண்டிற்கான சிறந்த அணிக்கான விருது பல்லவா அணிக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் மாண வர்களின் பெற்றோர்களும் பங்கேற்றனர்.