கோவை தொண்டாமுத்தூர் அருகே உணவு தேடி வீட்டுக்குள் புகுந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்த இரு காட்டு யானைகள் விளைநிலங்களில் இருந்த பயிர்களை சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்த தோட்டப்பணியாளர்களின் குடியிருப்பை முகாமிட்டன. அப்போது ஒரு காட்டு யானை ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சாப்பிட ஏதாவது கிடைக்குமா என தேடி அங்கிருந்த காய்கறிகளை எடுத்து சாப்பிட்டது. அப்போது வீட்டிலிருந்த தோட்ட பணியாளர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுக்க, மற்றொருவர் வீட்டில் ஒன்னும் இல்ல அவ்வளவுதான்.போ சாமி என யானையிடம் கூறி திருப்பி அனுப்ப முயன்றார்.